Friday 8 March 2013

எது பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தேவதூஷணம்?

by Ponnudurai Joseph on Sunday, February 5, 2012 at 8:28am ·


இயேசு கிறிஸ்து, தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். (பிலி 2:6-8).

இந்த உலகில் மனிதனாக பிறந்து பரிசுத்தமாக வாழ்ந்து காட்டி, நல்ல கனிகளை கொடுப்பது என்றால் என்ன என்று நமக்கும் நம் சந்ததிகளுக்கும் சாட்சியாக வாழ்ந்து காட்டி, பரத்திலிருந்து இரங்கி வந்த தேவ குமாரன், அவர் கர்த்தர் என்ற பெருமையே இல்லாமல் இவ்வுலகத்தில் மனிதனாகவே வாழ்ந்து, தியாகத்தோடு தன் ஜீவனையே பாவிகளாகிய நமக்காவே ஜீவ பலியாக அற்பணித்த இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை அறிந்தவர்கள் அவர் பிசாசினால் அற்புதங்கள் செய்கிறார் என்று துணிகரமாக சொன்னபோது இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் இதோ:

(மத் 12:32-33) எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள், மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள், மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

இந்த வாக்கியங்களில் இயேசு கிறிஸ்து மிகத்தெளிவாக சொல்லுகிறார்

• மரம் நல்லது என்றால் அதன் கனிகளால் அறியப்பட்டு அதை நல்லது என்று சொல்லுங்கள்

• மரம் கெட்டது என்றால் அதன் கனிகளால் அறியப்பட்டு அதை கெட்டது என்று சொல்லுங்கள்

எப்படியெனில்,

• தங்களது வாழ்க்கையில் பரிசுத்த்தை காத்துக்கொண்டு சாடசியாகவும் பிறருக்கு முன்மாதிரியாகவும் வாழ்கிறவர்களை நல்ல கனி கொடுக்கின்ற மரத்துக்கு ஒப்பிட வேண்டும்.

• வெளியே ஊழியக்காரர்கள் என்று சொல்லிக்கொண்டாலும் தங்கள் வாழ்க்கையில் துன்மார்க்கமாய் ஜீவித்தால், அவர்களை கெட்ட கனிகள் கொடுக்கின்ற மரத்துக்கு ஒப்பிட வேண்டும்.  

அற்புதங்களை செய்கின்ற ஒருவருடைய பரிசுத்தத்த தன்மையை அவர்கள் செய்கின்ற அவர்களுடைய கனிகளால் (கிரியைகளினால்) மட்டுமே நாம் அறிந்துகொள்ள முடியும். ஆதனால் அற்புதங்களை செய்கிறவர்களுடைய வாழ்க்கையின் பரிசுத்தத்தை அவர்களுடைய கனிகளினால் (கிரியைகளால்) கண்டு அவர்கள் எந்தவிதமான ஆவியினால் அற்புதங்கள் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

அப்படியானால்

• ஒருவர் மூலமாக அற்புதங்கள் செய்வது பரிசுத்த ஆவியானவரா? அல்லது

• ஒருவர் மூலமாக அற்புதங்கள் செய்வது அசுத்த ஆவிகளா?

என்பதை அவர்கள் செய்கின்ற அற்புதங்களினால் அல்லாமல் அற்புதங்களை செய்கிறவர்களின்; கனிகளால் மட்டுமே நிதானித்து அறிந்துகொண்டு, அற்புதங்கள் செய்வது என்ன ஆவி என்று சொல்லுங்கள்.

பரிசுத்த ஆவியானவர் அற்புதங்களை செய்கிறவர் என்பதில் சந்தேகமே இல்லை. அதேவேளையில் அசுத்த ஆவிகளும் அற்புதங்கள் செய்ய முடியும் என்று வேதம் மிகத்தெளிவாக ஆதாரங்களோடு நமக்கு போதிக்கிறது.

அதனால்,

• பரிசுத்த ஆவியானவரின் அற்புதங்களை அசுத்த ஆவிகளின் அற்புதங்கள் என்றும்

• அசுத்த ஆவிகளின் அற்புதங்களை பரிசுத்த ஆவியானவரின் அற்புதங்கள் என்றும்

நாம் சொல்லுவதுமே பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான தேவ தூஷணமாகும்.  அதற்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.

• பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளை தங்களுடைய வாழ்க்கையில் சாட்சியாக கொண்டவர்கள் மட்டும்தான் பரிசுத்த ஆவியானவரால் அற்புதங்களை செய்ய முடியும். இவர்கள் மூலமாக செய்யப்படுகின்ற அற்புதங்களை அசுத்த ஆவியின் அற்புதங்கள் என்று சொல்லிவிடாதீர்கள்.

• காணிக்கை திருட்டு, சபை சொத்துக்களை கொள்ளையடிப்பது, விபசாரம், பெருமை, பித்தலாட்டம், காணிக்கை என்ற பெயரில் பிறர் பொருட்களை வஞசகமாக அபகரிக்கின்ற பொருளாசையான விக்கிரக ஆராதனை, காணிக்கை பணத்தில் உல்லாசமாக வாழ்வது, சுயநலம் போன்ற அசுத்த ஆவிகளின் கிரியைகளில் ஈடுபடு;கின்றவர்கள் அசுத்த ஆவியினால்தான் அற்புதங்கள் செய்ய முடியும்;. நிச்சயமாக இவர்கள் செய்கின்ற அற்புதங்கள் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகின்றவைகள் அல்லவே அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.  இவர்கள் மூலமாக செய்யப்படுகின்ற அற்புதங்களை பரிசுத்த ஆவியின் அற்புதங்கள் என்று சொல்லிவிடாதீர்கள்.

பிரியமானவர்களே, அசுத்த ஆவிகளின் கிரியைகளில் ஈடுபடுகின்றவர்கள் செய்கின்ற அற்புதங்களை அவர்களின் கனிகளைகொண்டு நிதானிக்காமல் அது பரிசுத்த ஆவியானவர் செய்கின்ற அற்புதங்கள் என்று மட்டும் கண்மூடித்தனமாக சொல்லிவிடாதீர்கள். அதுவும் பரிசுத்த ஆவிக்கு விரோதமான தேவதூஷணம்தான் என்பதை மறந்துவிடவேண்டாம். அது இம்மையிலும் மன்னிக்கப்படுவதில்லை மறுமையிலும் மன்னிக்கப்படுவதே இல்லை. !!!!!! ஜாக்கிரதை !!!!!!!

இன்றைக்கு, விசுவாசிகளை பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாக தேவதூஷணம் சொல்ல வைப்பதற்காக சாத்தான் வஞ்சகமாக மத் 12:33 வசனத்தை மறைத்து அசுத்த ஆவிகளின் கிரியைகளை செய்கிறவர்கள்கூட இயேசுவின் நாமத்தை சொல்லி அற்புதங்களை செய்தால் அவைகளை எல்லாமே பரிசுத்த ஆவியானவர் நடப்பிக்கிறார் என்று வாய்கூசாமல் சொல்லி மக்களை நம்ப வைக்கிறார்கள். இந்த வஞ்சகர்கள் கிறிஸ்தவ சமுதாயத்தில் இன்றைக்கு பிரபலமாக இருப்பதால் இவர்கள் சொல்வதை பலர் நம்பிவிடுகிறார்கள். இது நம்மை தேவதூஷணம் சொல்ல வைப்பதற்காக சாத்தான் செய்கின்ற பயங்கரமான தந்திரம்.

 !!!!!! ஜாக்கிரதை !!!!!!!  !!!!!! ஜாக்கிரதை !!!!!!!   !!!!!! ஜாக்கிரதை !!!!!!!

 (2கொரி 11:13-15) அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய  அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே, அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

கள்ள அப்போஸ்தலர்களும் கபடமுள்ள வேலையாட்களும் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டு அற்புதங்கள் செய்வார்கள் என்று தேவன் நாம் புரிந்துகொள்வதற்காக தெளிவாக சொல்லுகிறார். ஆதனால் தங்களை நீதிமான்களாக காட்டிக்கொண்டு அடடூழியங்கள் செயகிறவர்கள் மூலமாக அற்புதங்கள் செய்கின்ற அசுத்த ஆவிகளையே பரிசுத்த ஆவியானவர்; என்று நம்பவைக்கிறார்கள். அதை நம்பவே வேண்டாம். அவர்கள் மக்களை நம்பவைப்பதற்காக சாட்சிகளை செட்டப் பண்ணுகிறார்கள். சிலருக்கு தலைவலி, கட்டி, கால்வலி போன்ற சுகமும் கிடைக்கிறது என்பதற்காக அவர்களை நம்பவேண்டாம். எச்சரிக்கையாக இருப்போம்!

No comments:

Post a Comment