Friday 8 March 2013

உம்முடைய மார்பில் சாய்ந்து இளைப்பார ஆசையாய் இருக்குது எங்கள் ஆசையை நிரைவேற்ற சீக்கிறமாய் வாரும் தேவனே!

பள்ளத்தாக்கை நோக்கி போகும் நீரோட்டத்தைப் போல
தேவனே உமது கிருபை தாழ்மையுள்ள மனிதனை நோக்கி விரைந்தோடுகிறது

காரிருள் வெளிச்சத்தை கானாது விலகுவது போல
எங்கள் பாவங்கள் உமது கிருபை எங்களை சந்திக்கும் நொடியில் மறைந்து போய்விடுகிறது

காய்ந்த வறண்ட நிலம் தண்ணீரைக்க கண்டவுடன் தனக்குள் வாங்கிக்கொள்வது போல உம்முடைய அன்பு ஏக்கமுள்ள எங்களுக்குள் பாய்ந்து எங்கள் கல்லான இதயத்தை கரைத்து ஈரமாக்குகிறது

புழுதி எழுந்து வானத்தை தொடும் போது வானத்தில் இருந்து வரும் மழையால் கானப்படாததைப்போல உம்முடைய வானத்தின் மன்னாவான சத்தியம் எங்களை சந்திக்கும்போது உலகத்தின் ஆசைகள் மறைந்து போகுது
ஆனாலும் தேவனே உம்மோடு பரத்தில் உம்மை கண்டுகளித்து உம்முடைய மார்பில் சாய்ந்து இளைப்பார ஆசையாய் இருக்குது எங்கள் ஆசையை நிரைவேற்ற சீக்கிறமாய் வாரும் தேவனே!

No comments:

Post a Comment