Thursday 21 March 2013

தேவஜனமே தமிழ் ஜனத்துக்கு நடந்த கொடுமையை கண்டு சாதாரனமாய் எடுப்பவர்களே!

by Johnson Durai Mavadi (Notes) on Thursday, March 21, 2013 at 7:32am
யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.இங்கே அநியாயத்தை பார்த்து கண் சொருகி கொழுப்பு மிகுதியால் பேசும் சுகஜீவியே  கேள் ,உன் சொந்த பிள்ளையை உன் கண் எதிரே கற்பழித்து கொலை செய்யும் போது நீ அவர்களை மண்ணியும் என்று சொல்லுவாயா? உன் மனைவியை  உன் கண் எதிரே கற்பழித்து கொலை செய்யும் போது நீ அவர்களை மண்ணியும் என்று சொல்லுவாயா? உன் சிறுகுழந்தையை கொடுரமாய் சித்தரவதைசெய்து கொள்ளும் போது தேவனே இவர்களை மன்னியும் என்று சொல்லுவாயா? தேவனுடைய சிந்தையை அறியாதவனே ஒருசமயம் பவுல் கூட ஒருவன் தன் தப்பன் மனைவியை வைத்தவனை சரீர அழிவுக்காய் சாத்தானுக்கு ஒப்புக்கொடுத்தார் ஏன்? விபச்சாரம் செய்தவனுக்கே இப்படி என்றால் மிருகத்தை சாதாரனமாய் ம்,அன்னித்து விட்டுவிடு என்று சொல்ல உனக்கு என்னாதிகாரம் இருக்குது ? பாதிக்கப்பட்டவன் தான் மன்னிக்கவேண்டும் நீ அல்ல ,நீ செய்யவேண்டிய காரியம் அவனுக்காய் நீயாயம் செய்யும் படி குரல் கொடுத்து கூடுமானால் உன் ஜீவனைப்பாராமல் மிர்ருகத்தை எதிர்த்து சிறுமைப்பட்ட அந்த்த ஜனத்தை விடுவிக்க வகை பார்க்க வேண்டு இதை விட்டு விட்டு வாய்கிழிய வேத வசனத்தை எடுத்து புரட்டி துன்மார்க்கத்துக்கு சப்போட் பிடிக்கிறாய் ,நீயோ தேவனுடைய சிந்தையை அறியாதவன் என்பதை வெளிக்காட்டுகிறாய் உன் தனி அறையில் போய் உன் மனைவி பிள்ளை  எல்லோரும் கொடுரமாய் செத்துவிட்டால் அந்த நிலை எப்படி இருக்கொம் என்று யோசித்துப்பார் பின்பு இங்கே பேசு  . 1கொரி5: 1. உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.1கொரி5:5. அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன்.
உபாகமம் 27:19 பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்படவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
நீதிமொழிகள் 23:10 பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே.
யோபு 30:25 துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.
அப்படியானால் தேவ்ஜனமே தமிழ் ஜனத்துக்கு நடந்த அநியாயத்தை சாதாரனமாய் நீ எடுத்தாயானால் நீ துன்பப்டும்போது உன் நியாயங்கள் எடுபடாமல் போகும் நீ தேவனால் அசட்டைப்பன்னப்படுவாய் என்பது நிச்சயம் ஆகையால் உன் என்னத்தை மாற்றி உன் அறையில் போய் அந்த ஜனத்துக்காய் தேவனிடத்தில் அழுது புலம்பு இல்லாவிட்டால் நீ பேசின வார்த்தையே உன்னை நீயாயந்தீர்க்கும் .உன் சுகபோகத்தின் இளைப்பாறுதலால் இப்படி பேசினதால் அதே அநீதி உனக்கு சம்பவிக்கும் படி தேவன் இடங்கொடுத்தால் எப்படி இருக்கும்? பேதைகூட யோசிப்பான் இதற்கும் பின் உன் வார்த்தை இதற்கு மறுப்பு சொன்னால் உன்னை என்ன சொல்லுவது உன்னை நான் மூடன் என்று சொல்லவில்லை அதற்கு எனக்கு அதிகாரம் இல்லை ஆனால் உன்னைப்பார்த்து வேதம் சொல்லுது.
சங்கீதம் 92:6 மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான்.

நீதிமொழிகள் 15:5 மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி.
நீதிமொழிகள் 18:2 மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான்.

ஏசாயா 32:6 ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.

உபாகமம் 25:1 மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள்.

இலங்கையில் நடந்த கொடூரனைப்பார்த்து குற்றவாளி என்று சொல்

உபாகமம் 32:4 அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.

ஆகையால் அவருடைய நீயாயத்துக்கு உகந்தவனாய் நடந்த்துக்கொண்டு பேசு

சங்கீதம் 68:5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார்.
ஆகையால் அவரைப்போல் நீயும் நீதி செய்யும்படி இலங்கையில் உள்ள ஜனத்துக்காய் உன் வாயைத் திற

சங்கீதம் 72:4 ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.

சங்கீதம் 76:8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,
ஏசாயா 3:14 கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.

ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.
ஏசா58:1. சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
கிறிஸ்தவ ஜனமே! நீ உன் சுகபோகத்துக்காய் தேவனிடத்தில் அழுகிறாய் சிறுமைப்பபட்ட ஜனத்துக்கு அநீதி நடந்தால் அதை சாதாரனமாய் எடுத்து மற்றவனுக்கு உபதேசிக்கிறாய்,உன் சொந்த காரியத்திற்கு உபவாசிக்கிறாய் இதோ உனக்கு கொடுத்த கர்த்தருடைய வார்த்தையைக்கேள் 4. இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்

எசா58:5. மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?
6. அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,

7. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.8. அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.

9. அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,

10. பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.
இந்த வசனத்துக்கு நேராய் உன் ஜீவியம் இல்லாவிட்டால் ஆசிவாத்த வசனத்துக்கு எதிரான சாபம் உன்னைப்பிடிக்கும் அல்லவா?

No comments:

Post a Comment