Thursday 21 March 2013

எத்தனை கொடூரங்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு

by Johnson Durai Mavadi (Notes) on Wednesday, March 20, 2013 at 8:28am
எத்தனை கொடூரங்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்தது அதுவும் தாய் தகப்பன் முன்னே இளம் பென்கள் இலங்கை மற்றும் இந்திய அமைதிப்படையால் கற்பழிக்கப்பட்டு குற்றுயிரானார்கள் இதுபோகாதென்று குழந்தைகள் ஆண்பிள்ளைகள் வருங்காலத்தில் புலியாய் மாறுவார்கள் என்று அவர்களை சுட்டுக்கொன்று எத்தனை கொடுரத்தை பார்த்தும் அவர்கள் உயிர் பிச்சை கேட்டு கூக்குரல் போட்டு கத்தியதை கேட்டும் அரசியல் நீதி பேசிக்கொண்டும் ஒரு நாட்டு பெரியமனிதன் சாவுக்காய் வக்காலத்து வாங்கி தமிழ் மக்கள் செத்தது சரியென்று கொஞ்சம் கூட ஈரக்கம் இன்றி பேசும் வாய்களைப் பார்க்கும் போது அவர்கள் வாயில் இரும்பை காய்த்து ஊற்றனும் போல் என் மாம்சம் வெறிகொள்கிறது.மற்றும் இத்தனைக்கொடுரங்களைப் பார்த்த கிறிஸ்தவ சபைகள் அதற்கு நாம் என்ன செய்யமுடியும் ஜெபிக்கதான் செய்யமுடியும் ஏதோ பாரம்பரிய ஜெபத்தை கொஞ்சம் கூட உயிரில்லாத ஜெபத்தை மெப்புக்காய் அரங்கேற்றியதைப்பார்க்கும்போது என் இதயம் அநேக கேள்வியை தேவனிடம் கேட்டது ,தேவனே சிறுமைப்பட்டவர்களின் கூக்குரல் கேட்டு அவர்களை காப்பாற்றுவீரே ஏன் இப்போது மவுனமாய் இருக்கிறீர் என்றேன் அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்த்தது ஏழைகளின்தேவன் தமது ஜனமாகிய ஏழைகளுக்காய் பழிவாங்க ஒரு யாகத்தை இப்பூமியில் நடத்துவார் அப்போது அவருடைய பிள்ளைகளாகிய உலகத்தின் அனைத்து சிறுமைப்பட்டவர்களுக்காய் பழிவாங்குவார் ஆனாலும் இந்த மாய்மாலகிறிஸ்தவர்களுக்கு என்ன தண்டனை என்று என் தேவனிடம் கேள்விக்கேட்டேன் அப்போது என் இதயத்தில் பதில் வந்தது இப்படிப்பட்ட உலக ஜீவிகளுக்கு தேவன் கொடுக்கும் தண்டனை நித்திய பாதாளம்தான் தன்னைப்போல் பிரரை நேசியாமல் சிறுமைப்பட்ட ஜனத்தின் கூக்குரலுக்கு தன் செவியை அடைத்துக்க்கொள்கிறவன் கூக்குரல் இடுவார்கள் தேவன் காதை அடைத்துக்கொள்வார்.அவர்களுக்கு தேவன் தரும் தண்டைனை பெரியது.சங்9:12. இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.சங்76:7-9. நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்?

நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது,

வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது.




தேவஜனமே உன் இருதயத்தை அடைத்துக்கொண்டாய்*** சங் 82 :2-7எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)

ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

  பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.’***
உங்கள் அக்கிரமம் மிகுதியாய் போய்விட்டது.
தேவ ஜனமே திக்கற்ற பிள்ளைகள் உயிர் பிச்சை கேட்டு அலறும்போது உன் செவியை அடைத்து நிம்மதியாய் படுத்து தூங்கி எழுந்தாயே! உன் சுயநல ஜெபத்தைக்கொண்டு அதிகாலையில்தேவனைத் தேடும்போது திக்கற்ற பிள்ளைகள் கூக்குரல் உன் இருதயத்தில் உணர்த்தபடாதாவாறு உன் இருதயக்கண் இருண்டு போயிற்றே!பச்சிலம் குழந்தைகள் சரிரம் நாற்நாறாய் கிழிக்கப்பட்டு எறியப்பட்டதைப் பார்த்தும் உன் இதயம் சிம்மாசனத்தில் இருப்பது எப்படி? தேவஜனமே கேள் நீயாயதீர்ப்பு உன்னில் தொடங்கும் போது இவைகள் தான் உனக்கும் சம்பவிக்கும் தேவனிடத்தில் உதவிக்கேட்பாய் தேவனோ செவிசாய்ப்பதில்லை
நீதிமொழிகள் 17:5 ஏழையைப் பரியாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
நீதிமொழிகள் 21:13 ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான்.
சங்கீதம் 10:18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.
மல்கியா 3:5 நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

தேவ ஜனமே! நீ அறிந்த தேவபக்தி என்ன?
யாக்கோபு 1:27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. என்று எழுதிருக்குதே! திக்கற்ற பிள்ளைகள் கூஇறலைக்கண்டு உன் வஸ்திரத்தை கிழித்து உபாவாசிக்கும் இந்த நேரத்தில் நீயோ கொட்டடித்து கைத்தட்டி தேவனை ஆறாதிக்கிறாய் உன் ஆராதைனையில் தேவன் மகிழ்வாரோ? சுயநலக்கார தேவஜனமே தேவன் உன்னைப்போல சுயநலக்காரர் அல்ல உன்னிடத்தில் அந்த இரத்தபலியைக்கேட்பார் நீ தப்புவதில்லை உன் முதலைக்கண்ணீர் அவரிடம் செல்லுபடியாகாது.

சங்94 1-7நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும்.

பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும்.

  கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்?

எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?

கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.

  விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:

கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

தேவஜனமே! மனந்திரும்பு உன் சுகபோகத்தை விட்டு வெளியே வா!

சங்94:8-10ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?

காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?

 ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ?

சங்94:16. துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்?
தேவஜனமே உன் பதில் என்ன?

No comments:

Post a Comment