Tuesday 14 January 2014

விசுவாசமாய் ஜீவிப்பது என்பது ஒரு இரகசிமாகும்

விசுவாசமாய் ஜீவிப்பது என்பது ஒரு இரகசிமாகும்.தங்கள் தேவைகள் அனைத்திற்கும்,தங்களுடைய மிகச்சிறிய தேவைகளுக்காகங்கூட தேவனை நோக்கிப் பார்ப்பவர்களே விசுவாச ஜீவியம் செய்கிறவர்கள் .அவர்கள் மரித்தாலும் எல்லாராலும் பேசப்ப்டுகிறவர்களாய் இருப்பார்கள்.
   நாம் வேதத்தில் அநேகர் மரித்தாலும் பேசப்படுகின்றனர் என்று உதாரணத்திற்கு நாம் ஆபேலைப் பார்க்கலாம் இன்று ஆபேல்  என்னப் பேசிக்கொண்டிறுக்கிறான் என்று நாம் சிலவற்றை ஆவியில் உணர்வோம்.அவன் “நான் விசுவாசத்தினால் ஜீவித்தேன் ,விசுவாசத்திற்காகவே மரித்தேன் .என் ஜீவியமும்,காணிக்கையும் தேவனுடைய பார்வையில் செம்மையாக இருந்தது.அவர் என் ஜீவியத்தைக் குறித்தும்,அவரோடுள்ள ஐக்கியத்தைக் குறித்தும் நல்ல சாட்சி கொடுத்தார்.நானோ இந்த உலகத்தில் ஜீவிக்கும் காலத்தில் விசுவாச ஜீவியம் செய்வதற்கு பின்பற்றத் தக்கவிதத்தில் ஒருவரும் இல்லாதிருந்தப்போதும் நான் விசுவாசத்தில் பிழைத்தும் ,விசுவாசத்திலே மரித்தேன் .என்பதையே அவன் மரித்தும் பேசப்படுகிறான்.

  ஆகையால் சகோரர்களே! உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தை விட்டுவிடாதீர்கள்,உங்களுக்குள் இருக்கும் நல்ல மனசாட்சியை காத்துக்கொள்ளுங்கள்,வேத வசனத்தின்படி நாம் ஆராய்ந்தால் விசுவாசம் என்பது உலகமாகிய சமுத்திரத்தைக் கடக்கும்படி நாம் யாத்திரை செய்யும் கப்பலாகும்,இங்கே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துதான் மாலுமியாய் இருக்கிறார்.

     “நல் மனசாட்சியை சிலர் தள்ளிவிட்டு விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள் 1திமோ1:19 இதில் எழுதப்பட்டப்படி இன்று அநேகர் நல்மனசாட்சியை தள்ளினவர்களாய் எப்போழுதும் வெறுப்புடன் கானப்படுகின்றனர் இதனால் மற்றவர்கள் மேல் பகையுனர்ச்சியுடனும் ,பொறாமையுணர்வுடனும் கானப்படுகின்றனர்.நாம் நல் மனசாட்சியை இழந்துப்போனால் நம்முடைய யாத்திரையில் கப்பல் செதமுண்டாகும் மற்றும் நாம் பரம கானானைச் சென்றடைய முடியாது. ஆகையால் நாம் நம்முடைய விசுவாசத்தை நல்ல மனச்சா     ட்சியால் காத்துக்கொள்ளவேண்டும்
இதில் நல் மனசாட்சி என்பது எந்நேரமும் தேவனோடு ஐக்கியத்தில் இருந்து அதற்கு எவ்விதத்திலும் தடைவராதபடி நம்முடைய மனசாட்சி அவரோடு ஒன்றியிருப்பதை குறிக்கும். “ விசுவாச ஜீவியத்தை நாம் சுத்த மனசாட்சியிலே காத்துக்கொள்கிறவர்களாய் இருக்கவேண்டும்1திமோ3:9. 

   நாம் செய்த ஏதாவது ஒரு பாவம் மன்னிக்கப்படவில்லையென்றால் நம்மில் நல் மனசாட்சி இருக்காது.அப்படியே மகா பரிசுத்த விசுவாசத்திலும் ஜீவிக்கமுடியாது.ஆகையால் நம்முடைய ஜீவியத்தை சுத்தமாக பாதுகாத்துக்கொள்ளவேண்டும் நாம் விசுவாசமுடையவர்களாய் இருப்போமாகில் மரணம் கூட நாம் பேசுவதை தடை செய்யமுடியாது. பிசாசும் தடை செய்யமுடியாது.விசுவாசத்தைக் காத்துக்கொள்ள நாம் கர்த்தரை முழுவதுமாய் சார்ந்து பற்ரிக்கொள்லவேண்டும் விசுவாசத்தை துவக்கினவர் அதை அந்த நாள் முதல் முடிவு வரைக் காத்துக்கொள்வார் .ஆகயால் நாம் விசுவாசத்தை காத்துக்கொள்ள நாம் அவரை சார்ந்துக்கொள்வதைத் தவிர வேற வழியேதும் இல்லை.
  நீங்கள் மரிக்கும்போது நீங்கள் விட்டுச்செல்லும் முன்மாதிரி ஜீவியம் பின்னால் வரும் தலமுறையினருடன் கட்டாயம் விசுவாசம் என்கிற மொழியினால் பேசும்.

No comments:

Post a Comment