Monday 13 May 2013


...என் பாத்திரம் நிரம்பி வழிகிறது (சங்கீதம் 23:5)-சகொ.விஜெய்

கத்தோலிக்க வாக்குத்தத்தம்:
புனித நற்கருணை எனும் திருச்சடங்கினால் உண்டாகும் மகிழ்ச்சியால் உன் பாத்திரத்தை நிரப்புவார்.

புராட்டஸ்டண்ட் வாக்குத்தத்தம்:
உங்கள் பாத்திரத்தை ஆசீர்வாதத்தினால் நிரம்பிவழியச் செய்வார்.

பெந்தேகொஸ்தே வாக்குத்தத்தம்:
உன் பாத்திரத்தை அபிஷேக அக்கினியால் நிரம்பிவழியும்படி செய்வார்:

கிருபை பிரசங்கியாரின் வாக்குத்தத்தம்:
உன் பாத்திரத்தை கிருபையாலும் தயவாலும் நிரப்புவார்

செழிப்பு பிரசங்கியாரின் வாக்குத்தத்தம்:
உங்கள் கல்லாப்பெட்டியை கரன்சி நோட்டுகளால் நிரம்பிவழியும்படி செய்வார்

தேவனுடைய வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதை பரிசுத்த ஆவியானவர் துணையோடு தியானம் செய்து கற்றுக்கொள்ளாமல் அவிசுவாசத்தாலும் சோம்பேறித்தனத்தாலும் மனிதர்களையும் அவர்கள் உண்டாக்கிய Denomination-களையும் சார்ந்துகொண்டால் இதுதான் கதி! மிக எளிமையான இந்த வசனமே இவர்களிடம் சிக்கி இந்தப் பாடுபடுமானால் முழுவேதாகமத்தின் கதி???!!

வேதத்தைக் கற்றுக்கொள்ள மனிதர்களை சார்ந்து கொள்ளுபவர்களுக்கு ஐயோ! ஐயோ!! ஐயோ!!!

No comments:

Post a Comment