Monday 13 May 2013


தேவனை எப்படி தொழுதுகொள்ளுவது?


அன்பான சகோதர சகோதரிகளே! ஒரு குறிப்பிட்ட வேத ஆராய்ச்சிக்காக உங்கள் உதவி தேவைப்படுகிறது. தங்கள் பதில்களை கமெண்ட் பகுதியில் எழுதலாம் அல்லது எனது man.of.god25@gmail.com என்ற எனது மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம்.
தேவனுக்கும் நமக்கும் உள்ள உறவின் மையமாகத் திகழ்வதும், ஒரு விசுவாசி எப்படி தேவனைத் தொழுதுகொள்ள வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இயேசுவே சொன்னதும்தான் கீழ்க்கண்ட வேதபகுதி:
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். (யோவான் 4:23, 24).
எங்கள் கேள்வி இதுதான்:
  1. தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுதல் என்றால் என்ன?
  2. நீங்கள் எப்படி அவரை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுகிறீர்கள்?
  3. உங்கள் சபையில் இதுபற்றி என்ன போதிக்கிறார்கள்?

No comments:

Post a Comment