Thursday, 14 March 2013

தேவ ஊழியன் ஜனங்களை சீடர்களாக்குவதில் கவனம் வைக்கவேண்டும்


தேவ ஊழியன் ஜனங்களை சீடர்களாக்குவதில் கவனம் வைக்கவேண்டும் சீடர்களின் தன்மைகள் 1.நான் இந்த உலகத்தான் அல்ல என்பதை உனர்ந்து,உலகத்தில் உள்ள மாயையான செயலில் இச்சை கொள்ளாமல் அதை வெறுத்து பரலோகத்தை தன் சொந்த வீடாகவும் அதற்கு ஏற்றப்படி தன்னை அற்பனித்தல்
2.தன்னுடைய சுய ஆசைஅல்லது சுயவிருப்பத்தை நிறைவேற்றாமல் தேவனுக்குப் பிரியாமானதை செய்யும் படி தன்னை தேவனுக்கு அடிமையாய் ஒப்புக்கொடுத்து எப்பொழுதும் சுயத்தை சாகடித்து தேவசித்தம் செய்தல்.
3.தேவனுக்காய் பாடுகளை  பொருமையாய் சகித்து தேவதிட்டத்தை நிறைவேற்ற தன்னை கிறிஸ்துவின் ஆளுகைக்கு ஒப்புக்கொடுக்கிறவன்.
4.தேவனை நேசிக்கும் காரியத்தில் முதன்மை தேவனுக்கு செலுத்தி வாழ்பவன்.உலகத்தையும்,அதிலுள்ளவகளையும் நேசியாதவனாய் இருப்பது.
இந்த அர்பனத்திற்கு கொண்டுவந்து சீடனானவன் சத்தியத்தையும்,
கிருபையையும் உடையவனாய் சீடனானவன் முதிர்சியை பூரணத்துவத்தை அடையும் படி அல்லது கிரிஸ்துவின் சாயலின் நிறைவை அடையும்படிக்கு
நடக்கையில் தாழ்மையுள்ளவனாய் எப்போதும் கிருபையை  பெற்று
சத்தியமாகிய தேவனுடைய சாயலை(கனி) வெளிப்படுத்தும் படி சத்தியத்திற்கு கீழ்படிந்து கனிகொடுக்கவேண்டும் இந்த நடைமுறைக்கான சத்தியம் சபையில் பேசப்படவேண்டும்.தேவன் நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பாய் மாற்ற முன்குறித்திருக்கிறார் (ரோ8:29)
இந்த மறுரூபமாக்கும் கிரியை இரட்சிப்பில் தொடங்கி வாழ்நாள் முழுவதும் நடக்கிறது.(2கொரி5:17) இந்த குரிப்பிட்ட நோக்கத்திற்காக தமது ராஜியத்தை வடிவமைக்கிறார். அதில் நாம் அநேக உபத்திரவங்கள்,சோதனைகள்,பாடுகள்மூலம் நம்முடைய விசுவாசம் பரிட்சிக்கப்பட்டு அது சுத்தமான பொன்னாகஅல்லது உறைந்த பனிக்கட்டியாக நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பாய் மாற்றுகிறது
    ம்னிதன் சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உள்ள தேவசாயலை மறுபடியும் திரும்ப்பெறவேண்டும் என்ற தேவனுடைய நோக்கமும், மனிதன் தேவனுடன் விட்டுவிட்ட அல்லது இழந்துபோன ஐக்கியத்தை மறுபடியும்பெற்றுக்கொள்ள
இரட்சிப்பின் கிரியை விசுவாசித்து ஆவியானவருக்கு கிழ்படியவும் ஜன்ங்களுக்குப் போதிக்கவேண்டும்.தேவனோடு உறவாடும் தன்மைக்கு ஜன்ங்கள் வழிநட்த்தப்படவேண்டும்.
நாம் ஆதி சிருஷ்டிப்பின் சாயலுக்கு மாற்றப்படும்போது இரண்டுகாரியம் நடக்கிறது. 1..தேவனோடு தடையில்லாத ஆழமான உறவில் நடக்கமுடியும்
இதுதான் எப்பொழுதும்  தேவனோடு சஞ்சரிக்கும் அனுபவம்.பாவம்தான் தேவ உறவை குலைத்துப்போட்ட்து,அந்த பாவம் நீக்கப்பட்ட்தால் இன்னும் அதிகமான உறவைப்பெற திறனைப்பெறுகிறோம்.தேவனில்இளைப்பாறுதலான அனுபவம்.
           2.தேவன் நமக்காக நோக்கம் கொண்டிருக்கும் இட்த்துக்கும் அவருடைய அனாதி திட்ட்த்துக்கும் நாம் கொண்டுபோகப்படுவோம்.
மறுரூபமாக்கப்படுத்தல் என்றால் நம் சிந்தனைகள்,விருப்பங்கள்,செயல்கள் இன்னும் அதிகமாய் இயேசுகிறிஸ்துவைப்போலாக்கும் என்பதுதான் சிறந்த பொருள்.
நம்முடைய சொந்த பலத்தினால் தேவனுக்காய் கிரியை செய்ய முடிக்க முடியாது.எரோ13:25
தேவஅவியானவர் மற்றும் அவருடைய சத்திய வல்லமையால்தான் முடியும்
(ரோ8:29)
தேவனோடு நடக்கையில் தொடர்ந்து முன்னேறவேண்டும் அதற்கு எதிர்த்து தன் சுயத்தின் படி நடந்த்தால் நாம் தேவனை எதிர்கிறவர்களாய் இருப்போம்.
உலக சினேகம் தேவனுக்கு விரோதமான பகை அப்படி எதிர்க்கும் அல்லது முரட்டாட்டம் செய்யும் போது பயங்கரமான நியாயதீர்ப்பை சந்திக்கவேண்டியத்திருக்கும்.(யாக்1:21-25 நீதி29:1 எபி3:8-11)
உன்மையான எழுப்புதல் திரள்கூட்ட்த்தை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை சீசத்துவத்தில் தேர்ச்சியை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சபை என்பது சீசத்துவத்தின் நடைமுறை பயிற்சியில் உள்ளவர்களைக் குறிக்கிறது. திரள்கூட்டம் மனிதனால் கட்டப்பட்ட ஆலயத்திற்கு வரலாம் தேவனுடைய சீடன் என்கிற தகுதி இல்லாத எவரும் சபையாகமுடியாது.ராஜ்ஜியத்தின் சுவிசேசம் சீடனாய் இருக்கிறவனுக்கே விளங்கும் ,திரள்கூட்ட்த்திற்கு இவை புரியாத புதிராய் இருக்கும், சீடனானவன்தான் சோதனையில் கனிகொடுக்க முடியும் .கிறிஸ்துவின் சாயலில் மறுரூபமாக்கப்படுவதே கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களின் பிதாவின் சித்தம் ஆகும்.பலவீனாமானவன் தான் மனுசன் இந்த பலவீனத்தில்தான் பரிசுத்த ஆவியின் பெலன் வல்லமையாய் கிரியை செய்யமுடியும் ஆகையால் நம்முடைய சுயமுயர்சியை விட்டுவிட்டு தன் பெலவீனத்தை தேவனிட்த்தில் ஒப்புக்கொள்ளவேண்டும் அப்போதுதான் தேவ ஆவியானவர் முழுவதுமாய் நம்மில் பெலன் செய்வார்.(2கொரி12:8-10)
இந்த மேன்மையான திட்ட்த்திற்குள்ளாய் ஒருவனை கொண்டுசெல்ல அவன் முதலில் தாழ்மையுள்ளவனாய் இருக்கவேண்டும் அப்போதுதான் கிருபை அவனில் கிரியை செய்யும்.
அந்த தாழ்மையின் தன்மை என்ன?
1.பெலவீனத்தை ஒத்துக்கொள்ளுதல்
2.பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுத்து அவரை முற்றிலும் சார்ந்த்திருத்தல்
3..நித்திய காரியங்களை நம்மூலமாய் நிரைவேற்ற பரிசுத்த ஆவியானவரை தன்னில் முழு ஆளுகை செய்ய அனுமதிப்பது இது நமது சொந்த சக்தியால் அல்ல பரிசுத்த ஆவியானவரின் வல்லமையால் மாற்றப்படும் வாழ்கையை குறிக்கும்.
4.மற்றவர்கள் பார்வையில் நாம் முக்கியமானவர்கள் போல் காணப்படவேண்டும் என்ற விருப்பம் இல்லாதிருப்பது.
தாழ்மையுள்ள மக்களால்தான் தேவன் தன்னுடைய திட்ட்த்தை சரியானபடி நிறைவேற்றமுடியும் அவர்களையே தேவன் அதிகம் விரும்புகிறார்.அவர்கள்தான் தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவர்கள்.
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றால் மாத்திரம் போதாது அவருக்கு தன்னை அடிமையாய் ஒப்புக்கொடுத்து அவர் நம்மில் கிரியைசெய்ய அனுமதிக்கும்போதுதான் தேவனுடைய சாயல் என்ற பூரனத்துவமும்,நித்திய நோக்கமும் சாத்தியமாகும்.
ஊழியம் பலவிதங்களில் செய்யலாம் ஆனால் தேவ திட்ட்த்திற்கு நேராய் செய்யவேண்டுமானால் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் ஆளுகையில்லாமல் செய்யமுடியாது.
சத்தியத்திற்கு செவிகொடுக்க ஒருவனை நாம் எச்சரிக்கலாம் தேவனுடைய வல்லமை இல்லாமல் அது செல்லும் பட்சத்தில் ஒரு கிரியையும் கானமுடியாது. சத்தியத்தை அறிந்தால் மாத்திரம் போதாது அந்த சத்தியம் உன்னில் கிரியை செய்ய உன்னை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கும் போதுதான் தேவனுடைய கிருபை உன்னை சந்தித்து சத்தியம் கிரியை செய்யமுடியும்.
இந்த நாட்களில் வேஅறிவில் முதிர்சிப்பெற்று சத்தியத்திற்கு நேராய் வழிநட்த்தும்படி எச்சரிக்கிறவர்கள் அநேகர் செய்யும் தவறு தன்னில் அந்த சத்தியம் கிறியை செய்ய தாழ்மை இல்லாதிருந்து கிடைத்த கிருபையை
இழந்து பெலனற்றவர்களாய் முடங்கி  சத்தியம் எனக்கு தேரியும் என்று மாம்சத்தில் பெருமை கொண்டு பொது இட்த்தில் மற்றவர்களின் பாவத்தை தூற்றுகிறவர்களாய் பரியாசக்கார்ராய் மாறிவிடுகிரார்கள். அவர்கள் தன் சொந்த ஜீவியத்தில் கிருபையை இழந்து மற்றவர்கள் முன்னால் கிரியையில் பாவத்தை வெளிப்படுத்தாமல் தனக்குள் ஒரு பாவசிந்தனையால் பீடிக்கப்பட்டு அந்தரங்கத்தில் தேவசிந்தனையை இழந்து கனி இல்லாதவர்களாய் மாறிவிடுகினறனர் .நான் உன்னைவிட நீதிமான் என்கிற பரிசேயனுடைய தன்மையில் வந்துவிடுவதால் தேவனுடைய கிருபை இல்லாமல் இருதயத்தில் பெலவீனர்களாகி பாவம்  கிரியைசெய்யும்படி
விட்டுவிடுகிறார்கள்.இது மிக கொடுரமானது .ஆகையால் எந்த ஒருவனும் தாழ்மையை இல்லை என்றால் கிருபை கிருபையை இழந்துவிடுவோம் என்கிற ஜாக்கிரதை உடையவனாய் இருந்து.எப்போது ஆவியில் எளிமையுள்ளவர்களாய் இருப்பது அவசியம்.

Sunday, 10 March 2013

உபாகமத்தின் உண்மை

உபாகமத்தின் உண்மை:
முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்

ஆசிரியர்: டேவிட் உட்


THE DEUTERONOMY DEDUCTIONS:
Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet


“சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்” ~தேவன் (உபாகமம் 18:20)[1]

“நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்னேன்” ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]
யூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்‍ஆன் 7:157). இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றிய பைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது, கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால், இஸ்லாமியர்களுக்கு மறுப்பும் பதிலும் காலகாலமாக‌ சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமது பற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.
முகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் "தீர்க்கதரிசன வசனமாக" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.
முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு "முகமது ஒரு பொய் (கள்ள) தீர்க்கதரிசி" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். முகமதுவின் "நபித்துவத்திற்கு" எதிராக இரண்டு ஆதாரங்களை உங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களை மிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன். என் இரண்டு வாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களை ஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றி சுருக்கமாக‌ விவரிக்கிறேன்.
I. உபாகமத்தின் உண்மை
(I. THE DEUTERONOMY DEDUCTIONS)
வாதம் பிரதிவாதம் பற்றி இரண்டு முக்கிய விவரங்கள் உள்ளன, அவைகள் Valid Logic மற்றும் True Premises ஆகும். இந்த இரண்டு விவரங்களும் நாம் சரியான முடிவு எடுக்க நம்மை அழைத்துச்செல்கிறது. ( The most basic argument form is the syllogism, and the most basic valid form of the syllogism is Modus Ponens.[3] The logical form of the following arguments is Modus Ponens; thus, they are logically valid: )
கீழ்கண்ட இரண்டு வாதங்கள் சரியான வாதங்கள்:

வாதம் A --- பொய் இறைவன் மற்றும் பொய் தீர்க்கதரிசி:

A1. ஒரு தீர்க்கதரிசி பொய்யான கடவுள்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால், அந்த நபர் ஒரு "கள்ள தீர்க்கதரிசி" ஆவார்.
A2. முகமது பொய்யான கடவுளின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்து இருக்கிறார்.
——————————————————
A3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி


வாதம் B -- பொய்யான வெளிப்பாடுகள்,மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள்

B1. ஒரு நபர் இறைவனிடமிருந்து வராத வெளிப்பட்டை சொன்னால், அந்த நபர் ஒரு கள்ள தீர்க்கதரிசி.

B2. முகமது இறைவனிடமிருந்து வராத வெளிப்பாட்டை சொன்னார்.

——————————————————

B3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி

மேலே சொல்லப்பட்ட இரண்டு வாதங்களும் சரியானவை, எனவே, உண்மையான வாதங்களின் அடிப்படை(True Premises) நம்மை சரியான முடிவு எடுக்க உதவுகின்றன. ஆக, இந்த இரண்டு வாத அடிப்படைகளும் உண்மையாக இருக்குமானால், முகமது ஒரு பொய் (அ) கள்ள தீர்க்கதரிசி என்று நாம் முடிவு செய்யலாம். வாருங்கள், நாம் இந்த "அடிப்படை வாதங்களைப் பற்றி" இன்னும் அதிகமாக ஆராய்வோம்.
II அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 உறுதியாக்கப்படுகின்றன.

II. PREMISES A1 AND B1 DEFENDED
அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ நாம் கவனித்தால் நமக்கு கீழ் கண்ட விவரங்கள் சுலபமாக புரிந்துவிடுகிறது. அதாவது, ஒரு நபர் பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால் அல்லது உண்மையான இறைவனிடமிருந்து வராத வசனங்களை உரைத்தால், அந்த நபர் கண்டிப்பாக உண்மையான தீர்க்கதரிசியாக(நபியாக) இருக்கமுடியாது. "முகமது பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது அதனால் எங்கள் நம்பிக்கை வலுவடைகிறது" என்று முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த இரண்டு அடிப்படை வாதங்கள் உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.

முகமது ஒரு உண்மையான நபி(தீர்க்கதரிசி) என்று நிருபிப்பதற்கு பைபிளின் உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய வாதத்திற்கு அடிப்படையாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதே போல‌, “Brief Illustrated Guide to Understanding Islam “ என்ற புத்தகத்தில் "முகமது பற்றி பைபிள் சொல்கிறது" என்றுச் சொல்லி, உபாகமம் 18ஐ மிகவும் முக்கியமான ஆதாரமாக காட்டியுள்ளார்கள். இதன் ஆசிரியர் I.A. இப்ராஹிம் அவர்கள் கீழ் கண்டவாறு கூறுகிறார்:

“The Biblical prophecies on the advent of the Prophet Muhammad are evidence of the truth of Islam for people who believe in the Bible”

“முகமது நபி வருவார் என்று பைபிளின் தீர்க்கதரிசனமே பைபிளை நம்புகிறவர்களுக்கு "இஸ்லாம் உண்மையான மார்க்கம்" என்பதற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகும்.”
உபாகமம் 18ல் இறைவன் சொன்னதாக மோசே சொன்னதாவது:


“உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.” (உபாகமம் 18: 18, 19)[4]


இந்த தீர்க்கதரிசன வசனத்தை முகமது பல வகைகளில் நிறைவேற்றினார் என்று இந்த புத்தகம் சொல்லிக்கொண்டே போகிறது. இந்த வாதம் பல முறை மறுக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும்(ad nauseum)[5]. நான் இங்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், "முஸ்லீம்கள் இந்த உபாகமம் 18: 18-19ம் வசனங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறார்கள் (இந்த வசனங்களை அவர்கள் அற்புதமான தீர்க்கதரிசன வசனங்கள் என்று கருதுகிறார்கள்). அப்படியானால், கண்டிப்பாக நாம் இந்த வசனங்களுக்கு அடுத்துவரும் வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறார் என்பதை புறக்கணிக்க‌ முடியாதே! இந்த வசனத்தில் இறைவன் சொல்கிறார்:

“சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.” (உபாகமம் 18:20)


இந்த வசனத்தின் படி நாம் "ஒரு பொய் நபியை(தீர்க்கதரிசியை)" இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்:

(1) தேவன் சொல்லும் படி கட்டளையிடாத வார்த்தைகளை அவர் சொன்னார் என்று சொல்பவர்.

(2) வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பவர்


முகமது பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று முஸ்லீம்கள் தங்கள் வாதத்தை முன்வைப்பதால், அவர்கள் இந்த இரண்டு அடிப்படை வாதங்களை (A1 and B1) தவிர்க்க முடியாது. மொத்தமாக சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் உபாகமம் 18ல் உள்ள வசனங்கள் தங்களுக்கு ஏற்றது என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் அந்த வசனங்களும் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1ஐ உண்மை என்று சொல்கின்றன. ( To sum up, Muslims have appealed to a passage in Deuteronomy 18, and that passage entails premises A1 and B1. Thus, according to Muslim claims, the first premise of each of the Deuteronomy Deductions is true.)
III அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 உறுதியாக்கப்படுகின்றன.

III. PREMISES A2 AND B2 DEFENDED
"உபாகமத்தில் வரும் வசனங்கள் முகமது பற்றி முன்னறிவிக்கிறது" என்ற‌ இஸ்லாமியார்களின் வாதங்களின் அடிப்படையில், ஒருவர் இறைவன் அனுப்பாத செய்தியை சொன்னாலோ அல்லது பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னாலோ அவர் ஒரு கள்ள(பொய்) தீர்க்கதரிசி(நபி) என்று நாம் கண்டோம். இதன் படி நாம் பார்த்தால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவார். ஏனென்றால், அவர் இந்த இரண்டு காரியங்களையும் செய்துள்ளார், ஏனென்றால், அவர் அபகீர்த்தியான‌ "சாத்தானின் வசனங்கள்" என்றுச் சொல்லக்கூடிய வசனங்களை அவர் அல்லாவின் பெயரில் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார்.

சாத்தானின் வசனங்கள் பற்றி நாம் கிறிஸ்தவ அல்லது யூத எழுத்துக்களிலிருந்து, புத்தகங்களிலிருந்து அல்ல, அதற்கு பதிலாக ஆரம்ப கால இஸ்லாமிய எழுத்துக்களிலிருந்தே நாம் அறிந்துக்கொண்டுள்ளோம். சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப கால இஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:

(1) Ibn Ishaq, (இபின் இஷாக்)
(2) Wakidi, (வாகிடி)
(3) Ibn Sa’d, (இபின் சத்)
(4) al-Tabari, (அல்‍-டபரி)
(5) Ibn Abi Hatim, (இபின் அபி ஹடிம்)
(6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்)
(7) Ibn Mardauyah, (இபின் மர்டவ்யா)
(8) Musa ibn 'Uqba, and (மூசா இபின் அக்பா)
(9) Abu Ma'shar.[6] (அபு மஷர் )

சிறந்த இஸ்லாமிய அறிஞராகிய இபின் ஹஜர் என்பவரின் கூற்றுப்படி, இந்த சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களில், ஒரு ஹதீஸ் உண்மையான அதிகாரபூர்வமானதாக கருதவேண்டுமானால் இருக்கவேண்டிய நிபந்தனையாகிய‌ "மூன்று சங்கிலித் தொடர்" நிபந்தனையையும் பூர்த்திசெய்கிறதாக இருக்கிறது [7]. ( three chains of transmission [isnad] ). இது மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும், இஸ்லாமியர்களின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த "சஹி அல்-புகாரி" என்ற ஹதீஸ் தொகுப்பும், சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதாக உள்ளது (Number 4862, கிழே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த விவரங்கள் போக, குர்‍ஆனில் உள்ள சில குறிப்பிட்ட வசனங்கள்(17:73-75 மற்றும் 22:52-53) "பல தெய்வங்களை அங்கீகரித்து, தவறு செய்து, தர்மசங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட முகமதுவிற்கு" பதில் அளிப்பதாக உள்ளது.

ஆகையால், இந்த சாத்தனின் வசனங்கள் என்ற நிகழ்ச்சி அதிகாரபூர்வமானது, உண்மையானது என்று நம்மை நம்பச்சொல்லி சரித்திரத்திலுருந்து பல ஆதாரங்கள் நம்மை கட்டாயப்படுத்துகின்றன. (இந்த சாத்தனின் வசனங்கள் பற்றி மிகவும் விவரமான ஆதாரங்களைக் தெரிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: முகமதுவும் மற்றும் சாத்தானின் வசனங்களும் - http://www.answering-islam.org/Responses/Saifullah/sverses.htm) இந்த சரித்திர ஆதாரங்கள் அனைத்தும் “சாத்தனின் வசனங்கள்” என்ற நிகழ்ச்சி ஒரு ஆதாரபூர்வமானது என்பதை நிருபிக்கின்றன. சரித்திர ஆய்வாளர்கள், "உலக தலைவர்களின் மற்றும் மத தலைவர்களின் வாழ்க்கையை" ஆய்வு செய்ய " Principle of Embarrassment " என்ற கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர். இந்த கோட்பாடு சட்டபூர்வமான புலன் விசாரனையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியர் " Annette Gordon-Reed " என்பவர், இந்த கோட்பாட்டை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:

"Declarations against interest are regarded as having a high degree of credibility because of the presumption that people do not make up lies in order to hurt themselves; they lie to help themselves."[8]

“தன் விருப்பத்திற்கு எதிராக சொல்லப்படும் அறிக்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும், ஏனென்றால், மக்கள் எப்போதும் தங்களை காயப்படுத்திக்கொள்வதற்காக பொய்யை சொல்வதில்லை, மாறாக தங்களுக்கு நன்மை உண்டாவதற்கே பொய்யைச் சொல்கிறார்கள்.”[8]


மேலே சொல்லப்பட்ட Principle of Embarrassment என்ற கோட்பாட்டை நாம் "சாத்தானின் வசனங்களோடு" ஒப்பிட்டுப்பார்க்கும் போது, "முகமதுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த கதை முஸ்லீம்களால் புனையப்பட்ட ஒரு கற்பனைக் கதையில்லை" என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள்(Non-Muslims) வேண்டுமென்றே இட்டுக்கட்டி இருக்கமுடியாது என்பதையும் நாம் காணமுடியும்; ஒருவேளை இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள் சொந்தமாக சொல்லியிருப்பார்களானால், முஸ்லீம்கள் தங்கள் சரித்திர எழுத்துக்களில் இக்கதையை நியாயப்படுத்தி காப்பாற்ற முயற்சி எடுப்பதை விட்டுவிட்டு, இந்த கதையின் ஆரம்ப விவரங்களைச் சொல்லி இது பொய் என்று நிருபித்து இருப்பார்கள்.

சாத்தான் வசனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்களில் உள்ள ஆதாரங்கள், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத‌ அளவிற்கு வலுவாக உள்ளது. இந்த விவரங்களை மனதிலே வைத்துக்கொண்டு, நாம் அல்-டபரி(History of al-Tabari) அவர்கள் தொகுத்த‌ சரித்திரத்தில் "சாத்தான் வசனம்" பற்றி என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.
அல்-டபரியின் சரித்திர தொக்குப்பின் படி(According to al-Tabari):

அல்லாவின் தூதர் தான் அல்லாவிடமிருந்து கொண்டு வந்த செய்தியை தன் இன மக்கள் கேட்காமல், தங்கள் முதுகை அவருக்கு காண்பிப்பதை அவர் கண்டவுடம் மிகவும் வேதனையுற்றார். அல்லாவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி இவர்களுக்காக இறங்கி, தான் தன் இன மக்களோடு ஒன்றுபடவேண்டும் என்று அவர் தன் உள்ளத்தில் விரும்பினார். தன் இன மக்களின் மீது அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவராகவும் இருந்த அவருக்கு, தன் இன மக்கள் இவர் மீது சுமத்திய சில கட்டுப்பாடுகளை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். அதனால், அவர் தன்க்குள் தானே போராடிக்கொண்டு, மிகவும் விருப்பத்தோடு ஏதாவது வெளிப்பாடு கிடைக்குமா என்று காத்துக்கொண்டு இருந்தார். பிறகு அல்லா வசனத்தை இறக்கினார்:

விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக! உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.


மற்றும் அவர் கீழ் கண்ட வார்த்தைகளை சொல்லும் போது:

நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?)


அவர் தன் உள்ளத்தில் இருக்கும் போராட்டத்தின் காரணமாகவும், தன் இன மக்களுக்கு எது வெளிப்பட வேண்டுமென்று விரும்பினாரோ அதன் படி, சாத்தான் அவர் வாயில் தன் வசனங்களை போட்டான்:

"இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்" (Al-Tabari, பக்கம். 108)


கடைசியாக‌ முகமது தங்கள் தெய்வங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்திற்காக, அனேக தெய்வங்களை வணங்கும் அந்த மக்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதற்கு பிரதிபலனாக "தங்கள் தெய்வங்களை இவர் அங்கீகரித்து குறிப்பிட்டபடியால், இவர்களும் அந்த மசூதியில் தொழுதுக்கொண்டார்கள்(prostrate), அந்த மசூதியில் தொழுதுக்கொள்ளாதவன் அவன் நம்பிக்கையுள்ளவனோ, நம்பிக்கையில்லாதவனோ ஒருவனும் இல்லை, எல்லாரும் தொழுதுக்கொண்டனர்"(Al-Tabari, பக்கம். 109)

அந்த பலதெய்வங்களை வணங்கும் அந்த மக்களோடு முகமதுவின் நட்புறவு மிகவும் குறுகிய காலம் வரை தான் நிலைத்தது, அந்த புறசமயத்தாரின் விக்கிரகங்களை புகழ்ந்து இவர் சொன்ன வசனம் அல்லாவிடமிருந்து வரவில்லை, அது சாத்தானிடமிருந்து வந்தது என்பதை இவர் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே அறிந்துக்கொண்டார். அல்லாவிற்கு எதிராக இவரின் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி இவர் அதிகமாக வேதனையுற்றார், அதனால் முகமது புலம்பினார்: "நான் அல்லாவிற்கு எதிராக பொய்யை புனைந்தேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக அவதூறுச் சொன்னேன்"(பக்கம் 11). இருந்தபோதிலும், "கப்ரியேல்" தூதன் முகமதுவை தேற்றினார், மற்றும் "எல்லா நபிகளும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில் அவ்வப்பொழுது விழுந்தவர்கள் தான்" என்று அவருக்கு அறிவித்தார். இந்த நம்பமுடியாத மற்றும் தடுமாறச்செய்யும் இந்த வாதம் பற்றிய விவரத்தை நாம் குர்‍ஆனிலும் காணமுடியும்:

“(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.” (குர்‍ஆன் 22:52)[9]

"And We did not send before you any apostle or prophet, but when he desired, the Shaitan made a suggestion respecting his desire; but Allah annuls that which the Shaitan casts, then does Allah establish His communications, and Allah is Knowing, Wise." (Surah 22:52)[9]


குர்‍ஆனின் அடுத்த வசனத்தின்படி, இருதயங்கள் கடினமான மக்களை சோதிப்பதற்காக, தன் நபிகளுக்கு சாத்தானினிடமிருந்து வசனங்கள் வர அல்லா அனுமதிக்கிறாராம்.

சாத்தானின் வசனம் பற்றி (முகமதுவை காப்பாற்றும் நோக்கில்) பகுத்தறிவுக்கு ஒவ்வாத குர்‍ஆனின் விளக்கம் பற்றி நாம் எப்படி நினைத்தாலும், ஒன்று மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறது, அதாவது இஸ்லாமின் நபி குறைந்த பட்சம் ஒரு சந்தர்பத்தில் அல்லாவிடமிருந்து வராத வசனத்தை வெளிப்பாடாக கொடுத்துள்ளார். மற்றும் பொய்யான தெய்வங்களின் பெயரில் குறைந்த பட்சம் ஒரு முறை முகமது தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்[10]. ஆக, முஸ்லீம்களின் ஆதாரங்களிலிருந்து அடிப்படை வாதங்களாகிய A2 மற்றும் B2 என்பவைகள் உண்மைகள் என்பதை நிரூபித்துள்ளோம்.
IV சாத்தியமான மறுமொழிகள்

(IV. POSSIBLE REPLIES)
வாத‌மூல‌க்கூறுக‌ளாகிய‌ A1,A2,B1 மற்றும் B2 போன்ற‌வைக‌ளை நான் ஏற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ள் ந‌ம‌க்கு இருப்ப‌தால், முடிவுக‌ளாகிய‌ A3, B3 இர‌ண்டையும் நாம் ஏற்றுக்கொள்வ‌து ச‌ரியான‌தாகும். இந்த‌ வாத‌ங்க‌ள் ந‌ம‌க்கு முக‌ம‌து ஒரு பொய் தீர்க்க‌த‌ரிசி என்ப‌தை காட்டுகின்றது. இருந்த‌போதிலும், முஸ்லீம்க‌ள் இந்த‌ முடிவை ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் எப்ப‌டி இத‌னை ம‌றுக்கிறார்க‌ள் என்பதையும் அதில் அவர்களது வெற்றிவாய்ப்பைப் பற்றியும் சுருக்க‌மாக‌ காண்போம்.

முஸ்லீம்கள் உபாகமம் 18:20ம் வசனம் ஒரு தவறான போதனை, இது தேவனிமிருந்து வராத ஒரு வெளிப்பாடு ஆகும் என்று ஒருவேளை சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் இந்த வழியில் போனால், "உபாகமம் 18:18,19"ம் வசனங்கள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது என்று அவர்கள் சொல்வது நகைப்பிற்கு இடமளிப்பதாக இருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துக்கொண்டு அவ்வசனங்கள் உண்மையாவை என்று மூஸ்லீம்கள் சொல்வது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்.(அதாவது, பைபிளில் உள்ளவைகளில் எதுவெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகிறதோ, அவ்வசனங்கள் சரியானவை என்றும், எவையெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகவில்லையோ, அது தீய யூதர்களால் மற்றும் கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டது என்றுச் சொல்வார்கள்) உபாகமம் 18ம் அதிகாரத்தில் வரும் ஒரு வசனம் "முகமது ஒரு நபி" என்பதை நிரூபிக்கிறது என்றும், அதே சமயத்தில் அதே அதிகாரத்தில் உள்ள இன்னொரு வசனம் திருத்தப்பட்டது காரணம் அவ்வசனம் "முகமது ஒரு கள்ள நபி" என்பதை சொல்வதினால் என்றுச் சொன்னால், இந்த உலகத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.(While it is alarmingly common for Muslims to pick and choose which passages in the Bible are correct (i.e. everything that agrees with Islam is correct, but everything that disagrees with Islam was corrupted by evil Jews and Christians), no one is going to be convinced by the claim that one verse in Deuteronomy 18 proves the prophethood of Muhammad, while another verse in the same passage is corrupted because it proves that he was a false prophet.)

ஆக, அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ மறுக்கும் முஸ்லீம்கள், உபாகமம் 18ம் அதிகாரத்தில் முகமதுவின் நபித்துவத்தைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்வதை இனி விட்டுவிடவேண்டும். மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன் என்று சொன்ன தீர்க்கதரிசன வசனம் தாம், முஸ்லீம்கள் "தங்கள் முகமது ஒரு நபி என்று நிரூபிக்க" முன்வைக்கும் கடைசி ஆதாரமாகும். எத்தனை முறை இந்த வாதத்தை மறுத்து ஆதாரத்தை காட்டினாலும், இதனை அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், முகமது வருவார் என்று பைபிள் தெளிவாக எந்த முன்னறிவிப்பும் சொல்லவில்லையானால், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பது நிச்சயம். ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த வேதங்களில் தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் உள்ளது என்று முகமதுவே சொல்லியுள்ளார். அப்படியானால், இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் சரியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை முஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தை பிடித்து தொங்கினால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பது நிரூபனமாகும். அப்படியில்லாமல், உபாகமம் 18ஐ அவர்கள் விட்டுவிட்டால், முகமது பற்றி தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இல்லை என்பதால், அவர்களுக்கு இதுவும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது, இது முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதைக் காட்டுகிறது.

ஒரு வேளை முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனம் என்றுச் சொல்லக்கூடிய உபாகமம் 18ம் அதிகாரத்தை விட்டுவிட்டாலும், அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிப்படமுடியாது. உபாகமம் 18ம் அதிகாரம் தேவனின் வசனமல்ல அது திருத்தப்பட்டது என்றுச் சொன்னாலும், அவர்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ அவர்கள் மறுக்கவில்லை, ஏனென்றால், இந்த அடிப்படை வாதங்கள் மிகவும் தெளிவானவை. இந்த அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிற முஸ்லீம்கள் நிரூபிக்கட்டும், இதற்கு அவர்கள், ஒரு உண்மையான தீர்க்கதரிசி(அ) நபி பொய்யான வசனங்களை பொய்யான தெய்வங்களின் மூலமாகக் கூட கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலைநிறுத்த முடியாத வாதங்கள் மூலமாக முஸ்லீம்கள் முயற்சிப்பதை காண நான் விரும்புகிறேன்.(Muslims who want to deny A1 and B1 must therefore show that these premises are false by arguing that genuine prophets can indeed deliver false revelations and speak in the names of false gods. I would love to see Muslims attempt to defend such an untenable position!)

முகமது மீது இன்னும் நம்பிக்கை வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ புறக்கணிக்கமுடியாது, ஆனால், A2 மற்றும் B2ஐ வேண்டுமானால் மறுக்கமுடியும். அப்படியானால், முகமது புறசமயத்தவர்களின் தெய்வங்களை ஆதரித்து சொன்ன வசனங்கள் பற்றி உள்ள அதிகபடியான சரித்திர ஆதாரங்களை முஸ்லீம்கள் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்படி மறுக்கும் முஸ்லீம்கள், ஏழு விதமான காரியங்களை செய்யவேண்டும்.


முதலாவது, அவர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய நிகழ்ச்சியின் (கதையின்)மூலத்தைப் பற்றிய காரணங்களை நேர்மையான முறையில் விவரிக்கவேண்டும் (அதாவது, இந்த கதையானது புறமதத்தவர்கள், யுதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய கட்டுக்கதை என்பதை நிருபிக்கவேண்டும்)

இரண்டாவதாக, ஏன் இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) ஆரம்ப முதலே இந்த கதையை மறுப்பதற்கான காரணங்கள் இருந்தும், ஏன் இந்த கதை சரியானது என்று எழுதி வைத்து இன்று நம்முடைய கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்கள். (இதற்கு பதிலாக, இந்த கதை ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் அப்போதே நிருபித்து இருக்கலாம்).

மூன்றாவதாக, Ibn Ishaq, Wakidi, Ibn Sa’d, al-Tabari, Ibn Abi Hatim, Ibn al-Mundhir, Ibn Mardauyah, Musa ibn ‘Uqba, and Abu Ma’shar போன்றவர்கள் தவறான விவரங்களைச் சொன்ன பழுதுள்ள சரித்திர ஆசிரியர்கள் என்று நிரூபிக்கவேண்டும் (இவர்களுடைய அறியாமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, எப்படியென்றால், இவர்கள் சொன்ன பொய் கதைகள் முகமதுவின் நபித்துவத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது)

நான்காவதாக, ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள்( சரிதையை எழுதியவர்கள்) தாங்கள் சொன்ன விவரங்கள் அதிகாரபூர்வமானது, நம்பகத்தன்மை உள்ளது என்று தெரிவிக்க பயன்படுத்திய‌ "சங்கிலித் தொடர் (Chains of Authority)" முறையைப் பற்றி இந்த முஸ்லீம்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்.

ஐந்தாவதாக, இஸ்லாமின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அல்-புகாரி ஹதீஸ் தொகுப்பு, இந்த சாத்தானின் வசனங்களை முகமது சொன்னார் என்பதைப் பற்றிய சில விவரங்கள் உண்மையானது என்று ஏன் சொல்கிறது, இதனை இந்த முஸ்லீம்கள் விளக்கவேண்டும்.

அல்-புகாரி இப்படியாகச் சொல்கிறது:

நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். (4862) [11]

The Prophet performed a prostration when he finished reciting Surat an-Najm [Surah 53], and all the Muslims and Al-Mushrikun (polytheists, pagans, idolaters, and disbelievers in the Oneness of Allah and in His Messenger Muhammad) and jinn and human beings prostrated along with him. (4862)[11]

புறசமயத்தார்கள்(Pagans) முகமதுவோடு ஏன் சிரவணக்கம்(Prostrate) செய்தார்கள் என்ற காரணத்தை புகாரி வேண்டுமென்றே மறைத்தாலும், அவர் தன்னையறியாமலேயே முகமது இந்த புறசமயத்தாரின் தெய்வங்களை புகழ்ந்துச் சொன்ன காரணத்திற்காகத் தான் இவர்கள் முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்று இபின் இஷாக்கும் மற்ற அறிஞர்களும் ஒலிவு மறைவின்றி சொன்ன சாத்தானின் நிகழ்ச்சிப் பற்றிய விவரங்கள் உண்மை என்பதை புகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.

ஆறாவதாக, இந்த முஸ்லீம்கள், "அல்லாவின் எல்லா நபிகளும் சாத்தானின் வசனங்களை சொல்லியுள்ளார்கள்" என்றுச் சொல்லும் குர்‍ஆன் சூரா 22:52ஐ விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். சாத்தானின் வசனத்திற்கு இந்த வசனம் சொல்லும் விளக்கமானது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நகைப்பிற்கு இடமளிக்கும் விதத்தில் உள்ளது.

ஏழாவதாக, முகமதுபற்றிய விவரங்களை நமக்கு எழுதிவைத்துவிட்டுச் சென்ற எல்லா இஸ்லாமிய அறிஞர்களும், முகமதுவிற்கு ஒரு யூத சூன்யக்காரன் மூலமாக பில்லிசூன்யம்(Black Magic) செய்யப்பட்டது அது இவரை ஆட்கொண்டது மற்றும் ஒரு முறை தனக்கு பிசாசு பிடித்து(Demon Possessed) இருந்தது என்று முகமதுவே நம்பிக்கொண்டு இருந்தார் என்று சொல்லும் பொது, ஏன் நாம் எல்லாரும் முகமது பற்றி கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் புறக்கணித்துவிட்டு, அதற்கு பதிலாக "முகமது நம்பகத்தன்மையுள்ளவர் என்று நம்பவேண்டும்" என்ற காரணத்தை இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு(Non-Muslims) விளக்கவேண்டும். (Seventh, they must show non-Muslims why we should reject all the available evidence and believe that Muhammad was spiritually reliable, when, as all informed Muslims will admit, Muhammad was the victim of black magic (a spell cast by a Jewish magician) and, at one point, was convinced that he was demon-possessed. )
இதையே வேறு விதமாக நாம் பார்ப்போம், இஸ்லாமின் நபி தனக்கு பிசாசு பிடித்து இருந்தது என்று தவறாக நம்பி இருந்த போது, தனக்கு பில்லி சூன்யம் செய்யப்பட்டது என்று அவர் நம்பி இருந்தபோது, அவர் சாத்தானின் வசனத்தை சொல்லியிருப்பார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது? (முகமதுவின் ஆன்மீக பிரச்சனைகள் என்ன என்பதை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும் : "சூனியத்தால் ஆட்கொண்ட தீர்க்கதரிசி(நபி)")

இஸ்லாமியர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய சரித்திர ஆதாரங்களை விளக்கமளிப்பதை கண்டுள்ளேன். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரித்திர ஆதாரங்களுக்கு சரியான மறுப்புகளாக இருப்பதாக நான் காணவில்லை. உதாரணத்திற்கு, U.C. Davis என்ற இடத்தில் எனக்கும் என்னோடு விவாதம் புரிந்த அலி அட்டை(Ali Ataie) என்ப‌வருக்கும் இடையே "முகமதுவின் நபித்துவம் - prophethood of Muhammad " என்ற தலைப்பில் நடந்த விவாதம் பற்றிச் சொல்வேன். இந்த விவாதத்தில், சாத்தானின் வசனம் பற்றி அல்புகாரி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது, " இது குர்‍ஆனின் கவிதை நடைப்பற்றிய அற்புதம்" என்றுச் சொல்கிறார். ஏன் புறசமயத்தார்கள் முகமதுவோடு சேர்ந்து சூரா 53க்காக சிரவணக்கம்(Prostate) செய்தார்கள் என்றால், அது இந்த சூராவின் கவிதை, இலக்கிய நடையில் அவர்கள் மயங்கியதால், முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்றுச் சொல்கிறார் அலி அட்டை (which, in its present form, ridicules polytheism). உண்மையில் அவர் அளித்த விளக்கம் கற்பனையின் அடிப்படையில் உள்ளதே தவிர ஆதாரபூர்வமானது அல்ல.

முஸ்லீம்கள் குர்‍ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டு வருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின் கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை. உண்மையில் குர்‍ஆன் தன் தெய்வீக ஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர் முஸ்லீமாக மாற்றமுடிந்தது. ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டு மற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்கு மாறினர். ஆக‌, முக‌ம‌து 53வ‌து சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அத‌ன் மென்மையைக் க‌ண்டு புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள்(pagans) சிர‌வ‌ண‌க்க‌ம் செய்த‌ன‌ர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற‌ இஸ்லாமிய‌ர்க‌ள் கூறுவ‌து என்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். ச‌ஹி அல்-புகாரியை விட‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் முந்தைய‌ ச‌ரித்திர‌ நூலாகிய‌ இபின் இஷாக்வுடைய‌ ச‌ரித்திர‌ வெளிச்ச‌த்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹ‌தீஸ் மிக‌வும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து. ஏன் புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள் சூரா 53க்கு த‌ங்க‌ள் சிர‌ம் தாழ்த்தி வ‌ண‌க்க‌ம் செலுத்தினார்க‌ள் என்று சிந்தித்துப்பார்க்கும் போது, ந‌ம‌க்கு கிடைக்கும் ந‌ம்ப‌த்த‌குந்த‌ கார‌ண‌ம் என்ன‌வென்றால், முக‌ம‌து, அவ‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளை புக‌ழ்ந்துச் சொன்ன‌ வ‌ச‌ன‌ங்க‌ளே ஆகும் என்ப‌து மிக‌வும் தெளிவாகும், இதைத்தான் ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாகிய‌ ச‌ரித்திர‌ ஏடுக‌ள் சொல்லும் விளக்கமுமாகும்.

இது வரை நாம் சிந்தித்த‌ விவரங்களை கவனித்துப் பார்த்தால், முகமது பற்றிய சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான முடிவுரை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பலவீனமான‌ நேரத்தில், முகமது சோதிக்கப்பட்டு, சாத்தான் மூலம் வந்த செய்தியை சொன்னார், இதனால், பல தெய்வ வணக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார் என்பது தெளிவாகப் புரியும். இதன் பொருள் என்னவென்றால், நாம் நியாயமான முறையில் அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 ஐ புறக்கணிக்கமுடியாது. அதனால், முஸ்லீம்கள் உபாகமத்தின் உண்மைக்கு சரியான மறுப்பை கொடுக்கமுடியாது. நாம் இந்த தவிர்க்க முடியாத முடிவுரையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், அதாவது, முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதாகும்.

V. மதிப்பீடு

V. ASSESSMENT
முடிவாக, நாம் மறுபடியும் அழுத்திச் சொல்லவிரும்பும் விவரம் என்னவென்றால், என்னுடைய இந்த முழு வாதங்களும் (இரண்டு அடிப்படை வாதங்கள்) இஸ்லாமியர்களின் சரித்திர ஏடுகள் மீதும் அவர்களின் வாதங்கள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்(Early Muslim Historians) , மிகவும் ஆச்சரியப்படக்கூடிய நேர்மையுடன் தங்கள் நபி மக்களுக்கு சாத்தானின் வசனத்தை சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2க்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். தற்கால முஸ்லீம்கள், முகமதுவின் ஊழியம் பைபிளின் ஆதரவுடன் தான் நடந்தேறியது என்பதை நிருபிக்க, உபாகமம் 18ம் அதிகாரம் இறைவனின் உந்துதலால் வெளிப்பட்டது என்று ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி தற்கால முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1க்கு தேவையான ஆதாரத்தை கொடுத்துள்ளார்கள். உபாக‌மத்தின் இரண்டு அடிப்படை வாதங்களும் உண்மையாக இருப்பதால், நமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளது, இந்த ஆதாரங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது, அது என்னவென்றால், "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்பதாகும்.

உபாகமத்தின் அடிப்படை வாதங்கள் உண்மை(i.e. logically valid with true premises) என்பதால், சத்தியம் என்ன என்று அறிந்துக்கொள்ள விரும்பும் ஒரு நேர்மையான மனிதன், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக்கொள்வான். இந்த வாதங்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பது என்பது ஒரு உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஒரு முஸ்லீம் இந்த வாதங்களை தீவிரமாக ஆராய்ந்து, சோதித்து, அதற்கு ஆதாரங்கள் உண்டா என்று பரிசோதித்து, கடைசியில் வாதங்களை மறுக்காமல், அதற்கு பதிலாக‌, முடிவுரையை மட்டும் மறுத்தால், இவர் எப்படிப்பட்டவர் என்றால், "உண்மையை தெரிந்துக்கொள்ள விருப்பமில்லாதவர் மற்றும் தான் வளர்க்கப்பட்ட நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்பும் ஒரு மனிதராகவே நமக்கு தென்படுவார்". எனக்கு என் அனுபவம் கற்றுக்கொடுத்ததின் படி பெரும்பான்மையான முஸ்லீம்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதே போல முஸ்லீம்களிலும் பலர் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட முஸ்லீம்கள் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டிய முதலாவது சத்தியம் என்னவென்றால், தாங்கள் நபி என்றுச் சொல்லும் முகமது ஒரு தீர்க்கதரிசியே அல்ல என்பதாகும். அதே போல இரண்டாவது சத்தியம், தாங்கள் நபி என்றுச் சொல்லும் இயேசுக் கிறிஸ்து ஒரு நபியை விட மேன்மையானவர் என்பதாகும். (இந்த இரண்டாம் சத்தியம் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்)

குறிப்புகள்:
அப்போஸ்தலர் 3:22. மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.

23. அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான்.

24. சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள்.

25. நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்.

26. அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

புதிய கட்டுரைகள் - 2013

புதிய கட்டுரைகள் - 2013

தேதி: 5th Jan 2013
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது:

புதிய கட்டுரைகள் - 2012

தேதி: 20th Dec 2012
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 18th Nov 2012
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 27th Sept 2012
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 14th July 2012
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  1. நவீன விஞ்ஞானம் குர்-ஆனில் காணப்படுமா? (‘குர்-ஆனில் விஞ்ஞானம்’ காணப்படுகிறது என்பவர்களுக்கு பொதுவான மறுப்பு)
  2. அன்புள்ள அப்துல்லாஹ் - கடிதம் 2
தேதி: 17th Jun 2012
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  1. குர்‍ஆன் ஏன் மற்றும் எப்படி தரப்படுத்தப்பட்டது? (HOW AND WHY THE QUR'AN WAS STANDARDIZED)
  2. அனைத்து முஸ்லிம்களுக்கு வெளிப்படையான சவால் (Open Challenge to All Muslims)
தேதி: 9th Jun 2012
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  1. மோசே அல்லது யாக்கோபு! அல்லாஹ்வின் குழப்பம்
  2. காபா மற்றும் எருசலேம் ஆலயத்திற்கு இடையே 40 ஆண்டுகள் இடைவெளியா?
தேதி: 04th Jun 2012
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
"அன்பு இஸ்லாமியர்களே, நான் ஏன் கிறிஸ்தவனானேன் என்பதை உங்களுக்கு சொல்லட்டும்" என்ற புத்தகத்தின் இரண்டு அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளது
தேதி: 19th May 2012

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு  கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
  1. இஸ்லாமின் அரச குடும்பம் - பகுதி 1: முஹம்மதுவின் ஆஸ்தி
  2. ஆரம்பகால கிறிஸ்தவத்தில் மற்றும் இஸ்லாமில் "வாள்" - ஓர் அறிமுகம்
தேதி: 15th Feb 2012

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் நடிகர்களை உருவாக்குகிறது! அதாவது நான் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறேன் என்றுச் சொல்கிறவனை இஸ்லாம் மிரட்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது, இஸ்லாமுக்கு மாறுகிறாயா அல்லது செத்து மடிகிறாயா? என்று இஸ்லாம் கேட்கும்போது, கொடுமைக்கு பயந்து, அனேகர் இஸ்லாமை உதட்டளவில் அங்கீகரித்து, தங்கள் இருதயத்தில் இஸ்லாமை வெறுத்து சபிக்கிறார்கள். ஆனால், இதனை வெளியே காட்டிக்கொள்ளாமல், கபடதாரிகளாக இஸ்லாமியர்களாக வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்கள் உருவாக யார் காரணம்?
இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்று எண்ணி இஸ்லாமியர்கள் முன்வைக்கும் அனேக வாதங்களில் ஒரு சில வாதங்களுக்கு இந்த ஆய்வில் பதில்களைக் காண்போம்.
தேதி: 15th Jan 2012

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் படி இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசியாவார். அவரை நாங்கள் நம்புகிறோம் மதிக்கிறோம் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள். ஆனால், அவர்கள் மரியாதை செலுத்தும் அந்த இயேசு என்ன போதித்தார், அவர் தம்மைப் பற்றி என்ன கூறியுள்ளார் என்று இஸ்லாமியர்களுக்குத் தெரியுமா?  இயேசுவின் போதனைகளை நாம் எங்கு காணலாம்? குர்‍ஆனில் காணலாமா அல்லது பைபிளில் காணலாமா?  இயேசு பேசியதாக வரும் வசனங்கள் குர்‍ஆனில் எத்தனை உள்ளது என்று  நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம்.  அந்த ஒரு சில வசனங்கள் கூட இயேசு பேசியது அல்ல, அவைகள் "இயேசு இவைகளை பேசினார் என்றுச் சொல்லி, 7ம் நூற்றாண்டில் மக்காவில் வாழ்ந்த முஹம்மது என்பவர் பேசியது". இயேசுவின் போதனைகளை நாம் பைபிளில் காணலாம். இஸ்லாமியர்கள் இயேசுவின் போதனைகளை அறியவேண்டுமென்பதற்காக இயேசுவின் போதனைகளை கீழ்கண்ட தலைப்புகளில் தருகிறோம்.

இயேசு நமக்கு எவைகளை போதித்தார்?
இயேசு தம்மைப் பற்றி என்ன கூறினார்?
ஒரு சவால்

புதிய கட்டுரைகள் - 2011

தேதி: 31th Oct 2011
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 30th Sep 2011
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 
தேதி: 13th Aug 2011
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. 
ரமளான் மாதத்தில் நோம்பு இருக்கும் இஸ்லாமியர்கள், முழு குர்‍ஆனையும் இம்மாதத்தில் படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தில் அரபி குர்‍ஆனை படிப்பார்கள். குர்‍ஆன் பாதுகாக்கப்பட்ட ஒரு வேதம் என்பது இவர்களின் நம்பிக்கை. எல்லா நாடுகளிலும் இருக்கும் குர்‍ஆன் ஒரே மாதிரியாக இருக்கும் என்பது இவர்களின் எண்ணம். ஒரு வார்த்தை கூட மாற்றம் இருக்காது, ஒரு எழுத்து கூட மாற்றம் இருக்காது, எழுத்தில் ஒரு புள்ளி கூட மாற்றம் இருக்காது என்பது இவர்களின் நம்பிக்கை. ஆனால், இரண்டு புகழ்பெற்ற மூல குர்‍ஆன்கள் உள்ளன, வர்ஷ் மற்றும் ஹப்ஸ் என்பவைகள் தான் அவைகள். இவ்விரண்டிற்கும் இடையே அனேக வித்தியாசங்கள் உள்ளன. இவைகள் இரண்டும் மூல குர்‍ஆன்களே. சில நாடுகளில் ஹப்ஸ், இன்னும் சில நாடுகளில் வர்ஷ் குர்‍ஆன் ஓதப்படுகிறது. இஸ்லாமியர்கள் சொல்வது போல, இவ்விரண்டும் ஒன்றல்ல.  இவைகளுக்கு இடையே இருக்கும் ஒரு சில வித்தியாசங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
தேதி: 28th July 2011
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 30th Mar 2011
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.


புதிய கட்டுரைகள் - 2010

தேதி: 2nd Oct  2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
முஹம்மது எப்படி இஸ்லாமியர்கள் விபச்சாரம் செய்ய அனுமதித்தார் என்பதை குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களின் துணைக்கொண்டு விளக்கப்பட்டுள்ளது, படிக்கவும்: குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்.
குர்‍ஆனின் இறைவனாகிய அல்லாஹ் தனக்கு எதிராக பாவங்கள் செய்து தன்னை அவமானப்படுத்திய மனிதர்களை மன்னித்து விட்டு, அவர்களின் காம சுகத்திற்காக சொர்க்கத்தை தயார்படுத்துகிறார். இதனால் அவர் ஒரு சுயமரியாதையற்ற ஒருவராகவே காணப்படுகிறார், ஆனால், பைபிளின் தேவன் ஒரு சுயமரியாதையுள்ளவராக செயல்படுகிறார், இதைப் பற்றிய ஒரு சுருக்கமான கட்டுரையை இங்கு படிக்கவும்: பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்.
தேதி: 27th Sept  2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று  கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆப்கனிஸ்தானில் கண்பார்வை இல்லாத ஒரு சிறுவன், முழு குர்‍ஆனையும் மனப்பாடம் செய்து வைத்திருந்தவன் எப்படி கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக அங்கீகரித்தான், கண்பார்வையுள்ளவர்கள் ஆச்சரியப்படும் படி அவன் செய்த செயல்கள் என்ன போன்றவைகளை இந்த சாட்சியில் படிக்கலாம்:  ஜியா  நோட்ராட்டின் வாழ்க்கை வரலாறு.
அடுத்தபடியாக, இரண்டி இஸ்லாமிய சகோதரிகளின் சாட்சியை இங்கு படிக்கவும், ஆயிஷாவின் சாட்சி, மற்றும் சிர்பில்லின் சாட்சி.
தேதி: 25th August  2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 27th July 2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
பைபிளில் அனேகர் தேவகுமாரர்கள் என்று அழைக்கப்பட்டு இருக்கும் போது, இயேசுவை மட்டும் ஏன் கிறிஸ்தவர்கள் தெய்வமாக வணங்குகிறார்கள், மற்றவர்களை ஏன் அதே போல நினைப்பதில்லை? இந்த கேள்விக்கு பதில் இக்கட்டுரையில் படிக்கலாம்: இயேசு, தேவனின் தன்னிகரற்ற குமாரன்.
ரம்ஜான் மாதம் நெருங்கிவிட்டது, இம்மாதத்தில் இஸ்லாமியர்கள் நோம்பு அல்லது உபவாசம் இருப்பார்கள், இதைப் பற்றி இயேசு என்ன கூறுகிறார்: நோம்பு (உபவாசம்) குறித்து இயேசுக் கிறிஸ்து (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) என்ன கூறினார்.
தேதி: 30th June 2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
குர்‍ஆனின் ஆசிரியருக்கு (அல்லாஹ் / முஹம்மது) மேசியா அல்லது மஸீஹா என்றால் என்ன என்றுத் தெரியுமா? மஸீஹா என்றால் என்ன என்று தெரிந்துக்கொள்ளாமலேயே "இயேசுவை மஸீஹா" என்று அனேக இடங்களில் குறிப்பிட்டுள்ளார்? இந்த சிறப்பான பட்டப்பெயர் ஏன் இயேசுவிற்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அல்லாஹ்வாவது அல்லது இஸ்லாமியர்களாவது பைபிளின் துணையில்லாமல் விளக்கமுடியுமா? படிக்கவும்: மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும்.  
ஞானஸ்நானம் கொடுப்பதில் அல்லாஹ்வை விட சிறப்பாக ஞானஸ்நானம் கொடுப்பவர் யார் என்று குர்‍ஆன் கேள்வி எழுப்புகிறது. யோவான் ஸ்நானகனை நபி என்று சொல்லும் இஸ்லாமியர்கள் அவர் கொடுத்த ஞானஸ்நானத்தை ஏன் எடுப்பதில்லை? படிக்கவும்: கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
தேதி: 27th June 2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 25th May 2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
பீஜே (பி ஜைனுல் ஆபீதீன்) அவர்களைப் போன்ற அனேக இஸ்லாமிய அறிஞர்கள், "இயேசு மனிதனாவார் அவர் இறைவன் இல்லை" என்ற தங்கள் வாதத்தை நிலை நாட்ட பைபிளின் ஒரு சில வசனங்களை தனியாக எடுத்து பொருள் கூறி, சத்தியத்தை விட்டு மக்களை திசை திருப்ப முயற்சி எடுக்கிறார்கள்.  ஆனால், இயேசு சொன்ன விவரங்கள் அனைத்தும் அவர் "இறைவன்" என்பதை நிருபிக்கின்றன. இதனை அறிய 36 கேள்விகளை கேட்டு, அதற்கான பதிலை இக்கட்டுரை தருகிறது, படிக்கவும்: இறைவனை அறிந்துக்கொள்வது எப்படி?
இஸ்லாமியர்கள் மத்தியில் ஊழியம் செய்யும் கிறிஸ்தவர்கள் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய பாடங்களை கோர்வையாக இந்த கீழ் கண்ட கட்டுரைகளில் படிக்கலாம், தங்கள் சபைகளில், நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளலாம், இஸ்லாம் பற்றிய உண்மைகளை கற்றுக்கொண்டு, மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கலாம். இன்னும் அனேக பாகங்கள் பிறகு பதிக்கப்படும்.
தேதி: 29th April 2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
முஹம்மது மெக்காவை கைப்பற்றிய பிறகு, பத்து பேரை கொலை செய்யும்படி தன் அடியார்களுக்கு சொல்லியிருந்தார். அந்த பத்து நபர்களில் பெண்களும் அடங்குவார்கள். ஏன் இப்படி அவர் செய்தார்? அவர்கள் செய்த குற்றம் என்ன? அவர்களை கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் என்ன குற்றம் புரிந்தார்கள்? அவர்களில் எத்தனை பேர் உயிர்த்தப்பினார்கள்? போன்றவற்றை அறிய படிக்கவும்: முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் (Muhammad And The Ten Meccans). குர்‍ஆனில் காணப்படும் சரித்திர தவறுகளில் ஒரு தவறு, மோசேவிற்கு தேவன் எத்தனை கற்பலகைகளை கொடுத்தார் என்பதைப் பற்றியதாகும், அதைக்குறித்து அறிய படிக்கவும்: குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்.
தேதி: 26th April 2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஆறு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
குர்‍ஆனில் காணபபடும் முரண்பாடுகள், சரித்திர பிழைகள் என்ன? குர்‍ஆன் எப்படி முந்தைய வேதமாகிய தோராவிற்கு முரண்படுகின்றது என்பதை விளக்கும் ஒரு சிறிய தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது:
தேதி: 28th Mar 2010
கடந்த வாரம் ஆன்சரிங் இஸ்லாம் ஹிந்தி (Answering Islam Hindi) பிரிவு கர்த்தரின் கிருபையால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
மனைவி கிழவியாகி விட்டாள் என்பதற்காக முஹம்மது தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்பினார், அதுவே குர்-ஆனின் சட்டமாகவும் ஆகிவிட்டது.  இது ஒரு நபிக்கு ஏற்ற செயலா? இது மனிதாபமானத்தொடு நடந்துக்கொள்வதா? படியுங்கள், இஸ்லாமிய நபியின் நன்னடத்தை: மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது: ஸவ்தா பின்ட் ஜமா (Muhammad, Lord of the Sent Ones? - SAUDA BINT ZAM’AH).
தேதி: 16th Mar 2010
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைக‌ள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் குர்‍ஆனில் சொல்கிறார், முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்புக் கேள், முஹம்மது சொல்கிறார், நான் பாவம் செய்தேன், இறைவா என்னை மன்னித்துவிடு. ஆனால், இஸ்லாமியர்கள் குர்‍ஆன் மற்றும் முஹம்மதுவிற்கு முரண்பட்ட நிலையில், முஹம்மது பாவம் செய்யாதவர் என்று சொல்கிறார்கள். இப்போது யார் சொல்வது உண்மை? குர்‍ஆன் சொல்வதா? முஹம்மது சொன்னதா? அல்லது இஸ்லாமியர்கள் நம்மிடம் சொல்வதா? படியுங்கள்: பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி.
ஒரு வயதிற்கு வராத சிறுமியை திருமணம் செய்துக்கொண்டதை நியாயப்படுத்த தனக்கு ஆயிஷாவை அல்லாஹ் கனவில் காட்டினார் என்று சொல்லி ஒரு கட்டுக்கதையை முஹம்மது சொல்லிவைத்தாரா?  அல்லது  ஜனப்போடு போட்டியிட அல்லது ஜனப்போடு சமமாக பெருமை அடித்துக்கொள்ள ஆயிஷா இப்படிப்பட்ட ஒரு கட்டுக்கதையை, அதாவது தன்னை அல்லாஹ் முஹம்மதுவிற்கு கனவில் காட்டினார் என்ற கட்டுக்கதையை சொல்லிவைத்தார்களா? படியுங்கள்: முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள் - ஜைனப் மற்றும் ஆயிஷாவின் முரண்பட்ட விவரங்கள்.
உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா? அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா? படியுங்கள்: "நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லியுள்ளாரா?

புதிய கட்டுரைகள் - 2009

தேதி: 31th Dec 2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

மோசேயின் காலத்தில் சமாரியர்கள் பற்றி கூறி குர்‍ஆன் ஒரு சரித்திர தவறை செய்துள்ளது, அக்கட்டுரையை படிக்கவும்: மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)
தேதி: 6th Dec  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது
26/11 மும்பை தாக்குதல் சிறப்புக் கட்டுரை: கடந்த ஆண்டு (2008) நவம்பர் மாதம் 26ம் தேதியன்று இஸ்லாமிய தீவிரவாதிகள் மும்பையை தாக்கினார்கள். பல இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பையும் காட்டினார்கள். இஸ்லாமிய தீவிரவாதத்தை அறிந்துக்கொள்ளவேண்டுமானால், முதலில் நாம் முஹம்மதுவை அறிந்துக்கொள்ளவேண்டும். முஸ்லிம்களில் ஒரு சிலர் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள் என்றுச் சொல்வதற்கு முன்பு, முஹம்மது எப்படி வாழ்ந்துக் காட்டினார், அவர் ஒரு தீவிரவாதியாக வாழ்ந்துக் காட்டினாரா அல்லது இன்றையை இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றபடி அவர் ஒரு அமைதியை நாட்டுகின்றவராக வாழ்ந்து காட்டினாரா? ஒரு பானை சொற்றுக்கு ஒரு சோறு பதம் என்றுச் சொல்வதுபோல் இன்றையை முழு இஸ்லாமிய தீவிரவாதத்தை அறிய வேண்டுமானால், முதலாவது முஹம்மது ஒரு தீவிரவாதியாக இருந்தாரா என்பதை அறிய வேண்டும். இதனை அறிய படிக்கவும்: முஹம்மது ஒரு தீவிரவாதியா?
தேதி: 27th September  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* இஸ்லாமுக்கு மக்களை ஈர்க்க பணத்தை பயன்படுத்தச் சொல்லி குர்-ஆன் கட்டளையிடுகிறது. இஸ்லாமியர்கள் ஹலாலாக சம்பாதித்து கொடுக்கும் ஜகாத்தில் ஒரு பகுதியை காபிர்களுக்கு (இஸ்லாமியரல்லாதவர்களுக்கு) கொடுக்கும்படி குர்-ஆன் கட்டளையிடுகிறது, முஹம்மதுவும் பணத்தை கொடுத்து இஸ்லாமியராக மாற்றினார். படிக்கவும்: பணமும் இஸ்லாமுக்கு மாறியவர்களும் - இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது.
* கனி தரவில்லை என்ற காரணத்திற்காக இயேசு ஒரு அத்திமரத்தை சபித்தார். மேலும், அது அத்திமரம் கனி தரும் காலமுமல்ல. அப்படியானால் இயேசு  ஏன் அத்திமரத்தை சபித்தார்? அதன் பின்னணி என்ன தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?
* ஏன் முஹம்மதுவின் மனைவிகள் “நம்பிக்கையாளர்களின் சகோதரிகள்” என்று அழைக்கப்படாமல் “நம்பிக்கையாளர்களின் தாய்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்? குர்-ஆன் எந்த காரணத்திற்காக மரியாளை புகழ்பெற்ற ஆரானின் சகோதரியாக அழைக்கிறது ஆனால் இம்ரானின் மகளாக அழைக்கிறது? குர்-ஆனின் முரண்பாட்டை படிக்கவும்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்.
தேதி: 27th July  2009

இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

சமர்கண்ட அரபி மூல குர்‍ஆனும், இன்று நம்மிடையே இருக்கும் குர்‍ஆனும், எழுத்துக்கு எழுத்து, வார்த்தைக்கு வார்த்தை ஒரே மாதிரியாக இருக்கின்றதா? "ஆம்" ஒரு எழுத்தும் வித்தியாசம் இருக்காது என்று இஸ்லாமிய அறிஞர்கள்  சொல்வார்கள், ஆனால், உண்மை வேறு மாதிரியாக உள்ளது, கீழ் கண்ட கட்டுரைகளில் சமர்கண்ட மூல குர்‍ஆனின் படங்களோடு இன்றைய குர்‍ஆனின் வசனங்களை ஒப்பிட்டு, இவ்விரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெளிவாக காட்டப்பட்டுள்ளது (இக்கட்டுரைகளின் பாகம் 1ஐ இங்கு படிக்கவும்)

பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2)
பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3)
பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)
தேதி: 18th July  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* இஸ்லாம் ஒரு சகிப்புத்தன்மையுள்ள மார்க்கம், இது மக்களிடையே பேதங்கள் பார்ப்பதில்லை என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள், ஆனால், ஒரு இஸ்லாமிய ஆண் ஒரு கிறிஸ்த பெண்ணை திருமணம் செய்ய அனுமதியுண்டு, ஆனால், ஒரு கிறிஸ்தவ ஆண் ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ய அனுமதியில்லை.  இந்த‌ சட்டத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது? ஏன் இப்படி இஸ்லாம் கட்டளையிடுகிறது, ஒரு இஸ்லாமியரை மணக்கும் கிறிஸ்தவ பெண்ணின் வாழ்வு இனிமையானதாக இருக்குமா? தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இஸ்லாமிய-கிறிஸ்தவ கலப்புத் திருமணங்களின் உண்மை.

*பழைய ஏற்பாட்டில் சில இடங்களில் வன்முறை காணப்படுகின்றதே! கானானியரை துரத்தி அவர்களின் நாட்டை இஸ்ரவேலுக்கு தேவன் அளித்தாரே! இது வன்முறையில்லையா? அப்படி இருக்கும்போது, இஸ்லாமிய தீவிரவாதிகளின் வன்முறையை மட்டும் ஏன் இவ்வளவு பெரியதாக மக்கள் எடுத்துக்காட்டுகிறார்கள்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலை இந்த சிறிய கட்டுரையில் காணலாம்:  பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை.

*இயேசு இஸ்லாமிய நபி என்று இஸ்லாமியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள், ஆனால், அவரது போதனைகளை குர்‍ஆனில் காணமுடியுமா?  இயேசுவின் போதனைகளை கட்டளைகளை பைபிளில் காணலாம், இந்த சிறிய கட்டுரையில் மத்தேயு சுவிசேஷத்திலிருந்து தொகுக்கப்பட்ட சில வசனங்களை காணலாம்: இயேசுவின் சில கட்டளைகள் (இன்ஜீலில் பதிவு செய்யப்பட்ட அதிகாரபூர்வமான கட்டளைகள்).

* இயந்திரத்தைப் போல  தன்னை தொழுதுக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் எதிர்ப்பார்க்கிறது? இப்படி தொழுதுக்கொள், இப்படி உட்கார், இந்த விதமாக கைகளைக் கட்டு, விரல்களை நீண்டு? இப்படி அனேக கட்டளைகளினால், அனேக இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டு, இஸ்லாமை விட்டு வெளியேறுகின்றனர். இப்படி இஸ்லாமைவிட்டு வெளியேறி இயேசுவின் இரட்சிப்பைப் பெற்ற ஒரு மலேசிய முஸ்லீமின் (தர்மிஷியின்) சாட்சியை இந்த கட்டுரையில் படியுங்கள்.
தேதி: 17th June  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இயேசு தன் செய்தியை பரப்ப பட்டயத்தை பயன்படுத்தினாரா? இயேசுவின் சீடர்கள் பட்டயங்களை பயன்படுத்தி இயேசுவின்  நற்செய்தியை பரப்பினார்களா? குறைந்த பட்சம் தங்களை பாதுகாத்துக்கொள்ள சீடர்கள் பட்டயங்களை பயன்படுத்தலாம், வன்முறையில் ஈடுபடலாம் என்று இயேசு சொன்னதுண்டா?  இஸ்லாமியர்களில் சிலர், இயேசு பட்டயத்தை  பயன்படுத்தலாம் என்றுச் சொன்னதாக கூறுகிறார்கள், இதற்காக சில பைபிள் வசனங்களை குறிப்பிடுகிறார்கள். இதற்கான பதில் என்ன தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் இந்த இரண்டு கட்டுரைகளை படியுங்கள்:

* மத்தேயு 10:34ல் உள்ள பட்டயத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கம்.
* லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்.

இஸ்லாமியர்களின் ஜெபங்களுக்கு/வேண்டுதல்களுக்கு அல்லாஹ் பதில் அளிப்பவரா?  கேளுங்கள் தரப்படும் என்று இயேசு சொன்னது போல, ஆபத்து காலத்தில் என்னை நோக்கி கூப்பிடுங்கள், நான் உங்கள் விடுவிப்பேன் என்ற வசனத்திற்கு ஏற்ப, குர்‍ஆனின் அல்லாஹ் சொன்னதுண்டா? வசனம் உண்டு என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள், அது எந்த வசனம், அதன் அர்த்தம் என்ன? தெரிந்துக்கொள்ள படியுங்கள்:

* அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
தேதி: 12th June  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் "கேள்வி பதில்" பகுதியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
தேதி: 23rd May  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* கேள்வி பதில் பகுதியில் "அறிவு  ஒரு பாவமா?" என்ற தலைப்பில் ஒரு சிறிய‌ கட்டுரை பதிக்கப்பட்டுள்ளது.
*மனைவியை முஸ்லீம்கள் எப்படி அடிக்கலாம்? லேசாக அடிக்கவேண்டுமா? காயம் ஏற்படாதவாறு அடிக்கவேண்டுமா? அல்லது அடிக்கவே கூடாதா? குர்‍ஆன் என்ன சொல்கிறது? இஸ்லாமிய அறிஞர்கள் குர்‍ஆன் வசனத்தை எப்படி மொழியாக்கம் செய்கிறார்கள்? தெரிந்துக்கொள்ள படிக்கவும்: அவர்களை அடியுங்கள் அல்லது அவர்களை அடிக்காதீர்கள்.
குர்‍ஆன் ஒரு அற்புதம், இதன் இலக்கிய நடைக்கும், இதன் வசனங்களில் உள்ள பொருளுக்கும் இணையாக எந்த புத்தகமும் உலகில் இல்லை, இது தான் இஸ்லாமியர்கள் நம்பிக்கை. குர்‍ஆனில் உள்ள ஒரு வசனம் போல, மனிதர்களாலும், ஜின்களாலும் கூட கொண்டுவரமுடியாது, இது குர்‍ஆனின் சவால். ஆனால் சவாலை யார் யார் மேற்கொண்டுள்ளார்கள்? தெரிந்துக்கொள்ள படிக்கவும்:
தேதி: 25th April  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* கேள்வி பதில் பகுதியில் இரண்டு பதில்கள் பதிக்கப்பட்டுள்ளது.
இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் இல்லையானால், அந்தச் செயலை யார் செய்திருப்பார்கள்? அல்லது இந்த செயலை செய்வதற்காகவே யூதாஸ் தேவனால் முன் விதிக்கப்பட்டு இருந்தாரா? குர்‍ஆனின்  அபூலஹப் என்ற 111 வது அதிகாரத்தில், யூதாஸைப் போலவே, அபூலஹப் தண்டனை அடைய முன்குறிக்கப்பட்டு இருந்தாரா? இந்த ஒரு சிறிய பதிலை படிக்கவும்:  யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுக்க முன்விதிக்கப்பட்டிருந்தாரா?
* பைபிள் பாரபட்சமில்லாமல் தன் கதாநாயகர்களின் (தீர்க்கதரிசிகளின், விசுவாசிகளின்) தவறுகளை சுட்டிக்காட்டுகிறதே?  இது சரியாகுமா? தீர்க்கதரிசிகள் பாவம் செய்யமாட்டார்கள் என்ற இஸ்லாமிய வாதம் சரியானதா? தெரிந்துக்கொள்ள படிக்கவும்: பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
* முஹம்மது தான் கடைசி இறைத்தூதர், தீர்க்கதரிசி என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள். அவர் தான் இறைவனின் நபித்துவ முத்திரை (கடைசியானவர்), இனி யாரும் வரமாட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் திடமாக நம்புகிறார்கள். ஆனால், இது சரியானதா? இறைவனின் உண்மையான நபித்துவ முத்திரை இயேசு தான் என்பதை பைபிள் ஆதாரத்தோடு இக்கட்டுரை விளக்குகிறது. முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்பதையும், இன்னொரு தேற்றரவாளன் வருவார் என்று இயேசு கூறியது, பரிசுத்த ஆவியானவரைத் தான் முஹம்மதுவை அல்ல, என்பதை விளக்குகிறது, இக்கட்டுரை. படிக்கவும்: இயேசுவா (அ) முஹம்மதுவா:  இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்?
தேதி: 3rd April  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* இஸ்லாம் அனுமதிக்கும் பலதார மணம் பற்றி டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் கருத்து சரியானதா? அவர் முன்வைக்கும் புள்ளிவிவரங்களுக்கு எந்த ஆதாரத்தையும் அவர் தரவில்லை, ஆனால் உண்மை புள்ளிவிவரம் என்ன சொல்கிறது? உலகை படைத்த இறைவன் மனிதன் ஒரு மனைவியோடு வாழவேண்டும் என்று விரும்பினாரா? தெரிந்துக்கொள்ள படிக்கவும்:  பல தார மணத்திற்கு மறுப்பு (Polygamy)
* இயேசுவும் முஹம்மதுவின் மனிதர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை உண்டக்கியுள்ளார்கள், இவர்களின்  தனிப்பட்ட வாழ்க்கை, கோட்பாடு இவரை பின்பற்றுகிறவர்களை ஆட்கொள்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இயேசுவா முஹம்மதுவா? உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
* இஸ்லாமியர்கள் கேட்கும் அனேக கேள்விகளில் ஒன்று "கிறிஸ்தவர்களுக்கு ஏன் பன்றி மாமிசம் சாப்பிடுகிறார்கள்?" என்பதாகும். இதற்கான பதிலை இங்கு படிக்கலாம்:  பன்றி மாமிசம் சாப்பிடுவதைப் பற்றிய விவாதம் (The Issue of Eating Pork)
* கிறிஸ்தவர்கள் மோசேயின் கட்டளையை மீறி நடக்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் கேள்வியை எழுப்புகின்றனர். ஆனால், அதே இஸ்லாமியர்கள் மோசே கட்டளையிட்ட அனேக கட்டளைகளை மீறி நடக்கிறார்கள். இப்படிப்பட்ட கேள்வியை எழுப்பிய ஷப்பீர் அலி அவர்களுக்கு கொடுத்த முதல் மறுப்பை இங்கு படிக்கலாம்: பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு ("ப‌ன்றி க‌றியை உண்ணுத‌ல்" க‌ட்டுரைக்கு கிறிஸ்த‌வ‌ ப‌தில்) - பாகம் 1
*  யூதர்களும் கிறிஸ்தவர்களும் மோசேயின் கட்டளைகளை பின் பற்றுவதில்லை என்று இஸ்லாமியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், முஹம்மது மோசேயின் அனேக கட்டளைகளை மீறி நடந்துள்ளார். ஒரு யூதனோ, கிறிஸ்தவனோ இஸ்லாமுக்கு மாறினால், அவனால் முழுவதுமாக மோசேயின் கட்டளைகளை பின்பற்றிக்கொண்டே ஒரு இஸ்லாமியனாக வாழமுடியுமா? நிச்சயமாக முடியாது? முஹம்மதுவின் போதனைகள் மோசேயின் கட்டளைகளுக்கு எதிரானவைகளாகும், மேலும் அறிய படிக்கவும்:  இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள்‌ (இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள்)
தேதி: 10th March  2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, இறைவனோடு நெருங்கி வாழவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இருந்தால், உண்மையான இறைவனை தேடினால், நிச்சயமாக அவரை கண்டுக்கொள்வான். இதோ ஒரு மலேசிய இஸ்லாமியர் உண்மை தெய்வத்தை கண்டுக்கொண்ட சாட்சி, படிக்கவும்: ஹிஷாமின் சாட்சி ‍- இப்போது நான் அல்-மஸீஹாவை முழுமையாக நம்பும் விசுவாசி.
* நோவாவின் கால வெள்ளம் உலகமயமானதா? அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்த வெள்ளமா?  பைபிள் சொல்லும் உலக மயமான வெள்ளம் தவறானது என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு, அவர்களின் குர்‍ஆனிலிருந்தும், ஆரம்ப கால இஸ்லாமிய ஆதாரங்களிலிருந்தும் பதில், படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?).
* நோவாவின் கால மக்களுக்கு நோவா மட்டும் தான் தூதராக வந்தார் என்று அல்லாஹ் குர்‍ஆனில் சொல்லிவிட்டு, இன்னொரு இடத்தில், அதற்கு நேர் எதிரான வசனத்தை இறக்கியுள்ளார், படிக்கவும்: குர்‍ஆன் முரண்பாடுகள் - நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
* நோவா 950 வருடங்கள் வாழ்ந்தார் என்று பைபிள் சொல்கிறது  அதே போல‌ குர்‍ஆனும் நோவா 950 வருடங்கள் வாழ்ந்தார் என்றுச் சொல்கிறது. ஆனால், குர்‍ஆன் ஆக்கியோன் செய்த ஒரு முக்கியமான முரண்பாட்டை இங்கு படிக்கலாம்: நோவாவின் வயது (Noah's Age).
தேதி: 16th February 2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* தான் ஒரு இஸ்லாமியராக இருந்திருந்தால், எப்படி இஸ்லாமின் பல கோட்பாடுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டு இருப்பார் என்று டல்லஸ் ரோர்க் விவரிக்கிறார். படிக்கவும்:  நான் ஒரு முஸ்லிமாக இருந்திருந்தால்...  (If I were a Muslim...).
* கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் குறித்து அனேக வித்தியாசங்களை நாம் அறிந்திருந்தாலும், இந்த ஒரு வித்தியாசம் நம் எதிர்கால நித்திய வாழ்க்கையை மாற்றிவிடும்,  படிக்கவும்: இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் இடையே உள்ள உண்மையான வித்தியாசம்.
* இஸ்லாமிய நாடாகிய மலேசியாவிலிருந்து இயேசுவே உண்மையான தெய்வம் என அறிந்துக்கொண்ட இஸ்லாமிய சகோதரர்கள் இருவரின் சாட்சிகள், படிக்கவும் 1) சகோதரர் பைசல் அவர்களின் சாட்சி 2) சகோதரர் யஹ்யா அவர்களின் சாட்சி.
* முஹம்மது பாவம் செய்தார் என்று குர்‍ஆன் தெள்ளத்தெளிவாக சொன்னாலும், அதனை ஜீரணித்துக்கொள்ள முடியாத சில குர்‍ஆன் மொழிப்பெயர்ப்பாளர்கள், தங்கள் கைவரிசையை தங்கள் மொழியாக்கங்களில் தொடர்ந்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள், அப்படி அவர்கள் என்ன செய்தார்கள் என்று அறிய படிக்கவும்: முஹம்மதுவின் பாவங்கள் - சூரா முஹம்மது 47:19 (The Sins of Muhammad).
தேதி: 31st January 2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* தற்போது காஸாவில் நடந்துக் கொண்டு இருக்கும் போரினால் விளையும் தீமைகள் என்ன? அமைதியை தேவன் எப்படி கொண்டுவருகிறார்? போன்றவற்றை அறிய படிக்கவும்:காஸா (Gaza): நீதியில்லை, அமைதியில்லை! நீதியை அறிந்துக்கொள், அமைதியை அறிந்துக்கொள்! (Gaza: No Justice - No peace! Know Justice – Know Peace!)
* அமெரிக்க விமானப்படை இராணுவ வீரர் தன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை எப்படி சௌதி அரேபியாவில் கொண்டாடினார் என்பதைப் பற்றிய உருக்கமான கடிதம், படிக்கவும்: சௌதி அரேபியாவில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் (Christmas in Saudi Arabia)
* மலேசியாவில் இஸ்லாமியராக பிறந்து, இயேசுவை அறிந்துக்கொண்ட ஒரு உயிருள்ள சாட்சி, இதோ: சகோதரர் சாரியாஹ் அவர்களின் சாட்சி (Brother Chariah’s Testimony)
* அஹமத் தீதத் அவர்களுக்கு முதல் மறுப்பு, யோனாவின் அடையாளம் என்றால் என்ன? என்ற அவரது புத்தகத்திற்கு மறுப்பு படிக்கவும்: உண்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (What Indeed Was the Sign of Jonah? ) - Part 1
* உலகில் இஸ்லாம்  வேகமாக வளருகிற மதமாக இஸ்லாம் உள்ளது, இதனால், இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம், இது இஸ்லாமியர்களின் வாதம் அல்லது ஊகம், இது சரியா? படிக்கவும்: வேகமாக வளர்ந்தால், அது உண்மையானதாக இருப்பதாக பொருளா? (More is Better?)
தேதி: 17th January 2009
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* மலேசியா நாட்டில் ஒரு பக்தியுள்ள இஸ்லாமியராக வளர்க்கப்பட்ட ஷரபுத்தீன் என்பவர், தான் இஸ்லாமிய கடமைகளை ஒழுங்காக செய்துவந்தும், தன் மனதில் ஒரு ஆன்மீக வெற்றிடம் இருப்பதை உணர்ந்து, சத்தியத்தை தேடி, அதை எப்படி கண்டுபிடித்தார் மற்றும் எப்படி இயேசுக் கிறிஸ்துவே உண்மையான இறைவன் என்பதை அறிந்துக்கொண்டார் என்பதை அறிய படிக்கவும்: சகோதரர் ஷரபுத்தீன் அவர்களின் சாட்சி (The Testimony of Brother Sharafuddin).
* இஸ்லாமியர்கள் அவ்வப்போது கேட்பார்கள்: "சுவிசேஷ நூல்கள் நான்கு இருக்கின்றன. இவைகளில் எது சரியானது?" இக்கேள்விக்கு பதில் கீழே தரப்படுகிறது. குர்‍ஆனில் ஒரு சில‌ குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் பல இடங்களில் மறுபதிவு (Parallel Accounts) செய்யப்பட்டுள்ளது,  அப்படிப்பட்ட 22 நேரடி உரையாடலில் உள்ள வித்தியாசங்களை அரபி வசனங்களோடு கண்டறிய படிக்கவும்: அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்? (Mis-Quotations in the Arabic Text of the Qur’an?).
* இஸ்லாமியர்கள் பொதுவாக கேட்கும் கேள்வி, "ஒரு இரட்சகர் அல்லது மீட்பர் என்பவர் நிச்சயமாக இறைவனாகத் தான் இருக்கவேண்டுமா?"  இக்கேள்விக்கான பதிலை வேத வசனங்களோடு விளக்கியுள்ளார் சாம் ஷமான் அவர்கள். இயேசுவே யேகோவா தேவன் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள படிக்கவும்: மீட்பர் அவசியம் கடவுளாகத் தான் இருக்க வேண்டுமா? (Is the Savior necessarily God?)

புதிய கட்டுரைகள் - 2008

தேதி: 30th December 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இயேசு சமாதானம் தருபவர் என்று நம்புகிறவர்கள் கிறிஸ்தவர்கள் மட்டுமே அல்ல. இஸ்லாமியர்களும் இயேசுக் கிறிஸ்து மறுபடியும் கடைசிக் காலங்களில் வருவார் என்றும் மற்றும் அவர் தீமையை வென்று, உலகமனைத்திற்கும் சமாதானத்தை தருவார் என்றும் நம்புகிறார்கள். மஸீஹாவாகிய இயேசு எப்படி சமாதானம் தருவார், அறிந்துக்கொள்ள படிக்கவும்: மஸீஹா, சமாதானம் ஏற்பாடுத்துபவர் (Messiah the PeaceMaker).
பைபிளைப் போலவே  குர்‍ஆனும் மஸீஹாவின் அற்புதப் பிறப்பு எனபது "இறைவனிடமிருந்து வந்த அடையாளம்" என்றுச் சொல்கிறது. அல்லா கொடுக்கும் அடையாளம் பற்றி குர்‍ஆன் மிகவும் மெச்சிக் கொள்கிறது, இவ்வார்த்தைகள் நம்மை ஆழமாக சிந்திக்கத்தூண்டுகிறது, அல்லாவின் அடையாளத்தை புரிந்துக்கொள்பவர்களைப் பற்றி குர்‍ஆன் சிந்தித்து உணரக்கூடியவர்கள், கற்றறிந்தவர்கள் என்று புகழுகிறது. அல்லாவின் அடையாளமாம் இயேசு எப்படி நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்பதை அறிய படிக்கவும்:  சொர்க்கத்தின் வழிகாட்டி (Signposts to Paradise).
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசு கிறிஸ்து "இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்" என்று நம்புகிறார்கள் (அரபியில் கலிமதுல்லா). அவர் தேவனுடைய வார்த்தையாக இருப்பதினால், வெளிச்சத்தை கொடுக்கிறார்.  குர்‍ஆனிலும் படிக்கிறோம், "அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன, அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது". நேர்வழியையும், ஒளியையும் உடைய இஞ்ஜிலைப் பெற்றவர் எப்படி நம் இருளை போக்குகிறார் என்பதை அறிய படிக்கவும்: இருளை ஒளியாக்குதல் (Lighting Up The Darkness).
தேதி: 25th December 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஒரு கட்டுரை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
முதலாவது, இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு கிறிஸ்து ஜெயந்தி நல் வாழ்த்துக்கள். ஒரு இஸ்லாமிய சகோதரர் அல்லது சகோதரிக்கு இயேசுக் கிறிஸ்து எவைகளைத் தருவார்? அல்லா கொடுப்பதைப் போல கொடுப்பாரா அல்லது அதை விட சிறப்பானதை தருவாரா? இஸ்லாமிய சகோதரிகளுக்கு கிறிஸ்தவம் கொடுக்கும் உரிமைகள் என்ன? இந்த கிறிஸ்து ஜெயந்தி நாளில் இவைகளைப்பற்றி அறிய சொடுக்கவும்: ஒரு முஸ்லீமுக்கு கிறிஸ்து எவைகளைத் தருகிறார்? (What Does Christ Offer to a Muslim?).
தேதி: 22nd December 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே. படிக்கவும்: கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே! - Merry Christmas to Muslims!
* கால‌ங்காலமாக, பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும், முஹம்மதுவை இயேசுவோடும், மற்றும் கு‍ர்‍ஆனை பைபிளோடும் ஒப்பிட்டு வந்துள்ளனர்.  ஆனால், எது சரியான ஒப்பிடுதல்?  நாம் இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் ஒப்பிடவேண்டுமானால், குர்‍ஆனோடு இயேசுவைத் தான் ஒப்பிடவேண்டும், பைபிளை அல்ல‌. எப்படி என்பதை படிக்கவும்:  தேவன் தம்மை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்? (How does God reveal Himself?)
தேதி: 12th December 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* செப்ட‌ம்ப‌ர் 11 நிக‌ழ்வுக‌ளுக்குப் பிற‌கு நாட்டின் செய்தித் தொடர்பை பயன்படுத்துக் கொள்ளும் இஸ்லாமிய‌த் த‌லைவ‌ர்க‌ள், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்க‌மென்றும் முஹம்மதுவின் இந்த‌ மார்க்கத்தில் வ‌ன்முறைக்கு எந்த‌ அடிப்ப‌டையும் இல்லை என்றும் சொல்லி வ‌ருகிறார்க‌ள். அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் பிரிட்டனின் பிரதமர் பிளேர் ஆகியோரும் கூட இஸ்லாம் சில வன்முறை வெறியர்களால் "கடத்தப்பட்டுள்ளது" என இதே அறிக்கையை மறு மொழிந்துள்ளனர். இது உண்மை தானா? படிக்கவும்: இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை என்பதற்கு பத்து முக்கிய காரணங்க‌ள்  (முஹம்மதுவின் வாழ்க்கையிலும் குர்‍ஆனிலும் வன்முறை).
* சரி, அபு அஃபக் முஹம்மதுவின் நபித்துவத்திற்கு, நம்பகத்தன்மைக்கு ஒரு அச்சுறுத்தலாக இருந்தார் என்றே வைத்துக் கொள்வோம்.  ஆனால் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் இரவு வேளையில் சதி திட்டமாக கொலை செய்யப்படவேண்டியவரா? அவருடைய கருத்து முஹம்மதுவுக்கு அவ்வளவு பயமுறுத்தலாக இருந்ததா? பத்ரு பேரில் மலக்குகள் முஹம்மதுக்கு உதவவில்லையா? அப்படியிருக்கும் போது ஏன் 120 வயதான ஒரு யூத மனிதனுக்கு பயப்படவேண்டும்?   படிக்கவும்: முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும் (MUHAMMAD AND THE MURDER OF ABU AFAK).
* இஸ்லாமியர்களில் சிலர் ஏன் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் மனதில் ஓடும் எண்ணம் என்ன? அவர்கள் யாரை பின்பற்றி இப்படிப்பட்ட செயல்களைச் செய்கிறார்கள். இஸ்லாமியர்களின் புனித நூலாகிய குர்‍ஆனும், ஹதீஸ்களும் அவர்களுக்கு போதிக்கும் பாடம் என்ன?  படிக்கவும்: அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு (To Kill and To Die In The Name of Allah).
தேதி: 29th November 2008 
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* நான் ஒரு முஸ்லிம். கிறிஸ்த்துவ மதத்தைப் பற்றி நான் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறேன். திரித்துவக் கொள்கையைப் பற்றி நான் கேள்விப்பட்டு இருக்கிறேன், ஆனால், அதை என்னால் சரிவர விளங்கிக் கொள்ள முடியவில்லை, விளக்குங்களேன்.  சாம் ஸ்க்ளார்ப் அவர்களின் சுருக்கமான பதிலை படிக்கவும்: திரித்துவமும் நீங்களும் (Trinity and You).
*  தீர்க்கதரிசிகள் நம்மைப் போல  பாவம் செய்யமாட்டார்கள் என்று முஸ்லீம்கள் நம்புகிறார்கள். பழைய ஏற்பாட்டு நபர்களின் தீய குணங்களை பைபிள் சுட்டிக்காட்டும் போது, அவர்கள் அப்படி தீய குணத்தை உடையவர்கள் அல்ல என்று இஸ்லாமியர்கள் அடித்துச் சொல்வார்கள். ஆனால், குர்‍ஆனும் ஹதீஸ்களும் இஸ்லாமிய நபிகளின் பாவங்களை சுட்டிக்காட்டுகிறது என்பதை இவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள், இதோ இஸ்லாம் சொல்லும் ஒரு சில நபர்களின் தீய குணங்கள், படியுங்கள்: இஸ்லாமும் நபிகளின் பாவங்களும் பாகம் 1.
* கிறிஸ்தவத்தின் ஸ்தாபகர்  பவுல் தான், இயேசுகிறிஸ்து அல்ல என்று இஸ்லாமியர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவின் செய்திக்கு நேர் எதிரான போதகத்தை பவுல் செய்தார் என்று குற்றம் சாட்டுவார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட இரண்டு கட்டுரைகளில், இயேசுவின் செய்திக்கும், பவுலின் செய்திக்கும் இடையே உள்ள 133 ஒற்றுமைகளை இரண்டு பாகங்களாக படியுங்கள். 
* இஸ்லாம் என்றால் "அமைதி" எனப்பொருள் என்று இஸ்லாமியர்கள் புதிய விவரத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாம் என்றால் அமைதி என்ற பொருள் என்பதை நம்பவேண்டுமானால், அதே இஸ்லாம் என்றால் "பாம்பின் கடி அல்லது பாம்பின் கொட்டுதல்" என்பதையும் நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும். எப்படி என்று தெரிந்துக்கொள்ள படிக்கவும்: இஸ்லாம் மற்றும் அமைதி (Islam and Peace).
தேதி: 15th November 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* சில இஸ்லாமிய நாடுகள் சுவிசேஷத்திற்கு தடை விதிக்கின்றன, இஸ்லாமியர்கள் நற்செய்தியைக் கேட்டுவிடக்கூடாது,  இயேசுவே உணமையான இறைவன் என்பதை அவர்கள் அறிந்துவிடக்கூடாது,  என்பதற்காக பல சட்டங்களை உருவாக்கி, தடை விதிக்கின்றன. ஆனால், இயேசு இஸ்லாமியர்களின் கனவில் வராமல் இருக்க‌ இந்த அரசுகள் தடை விதிக்கமுடியுமா? இது சாத்தியமா? இதோ, ஒரு இஸ்லாமியரின் கனவில் இயேசு தோன்றி அந்த இஸ்லாமியரை தன் ஆட்டுக்குட்டியாக மாற்றிக்கொண்ட அற்புத சாட்சி,படியுங்கள்: உன்னிடம் உன் சிலுவை இருக்கிறதா? (Do you have your cross yet?).
*  ஒரு எலியைக் கூட கொல்வதற்கு மனம் வராத ஒரு முஸ்லீம் எப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, மனிதர்களைக் கொல்ல முயற்சி எடுத்தார்? பிறகு பைபிளைப் படித்து, பைபிளே சொக்கத் தங்கம், குர்‍ஆன் ஒரு போலி என்பதை அறிந்தார் என்பதை அறிய படிக்கவும், இயேசு பிறந்த பெத்லகேமில் பிறந்த வாலித் என்ற இஸ்லாமியரின் சாட்சி (Walid's Testimony).
* கனடாவில் பிறந்து பாகிஸ்தானில் 23 ஆண்டுகள் முஸ்லீம்களின் மத்தியில் ஊழியம் செய்த கிறிஸ்தவர், பல ஆண்டுகள் இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் நன்கு அறிந்துக் கொண்டு, தான் ஏன் கிறிஸ்தவராக இருக்கிறார் என்பதை மூன்று முக்கிய காரணங்களாக கூறுகிறார். ஒவ்வொரு காரணத்திலும் குர்‍ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு கூறியுள்ளார், படிக்கவும்: நான் ஏன் கிறிஸ்தவனாக‌ இருக்கிறேன் (Why I am a Christian).
தேதி: 25th October 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* இயேசு கூட புனிதப்போர் (ஜிஹாத்) புரிந்தார். ஆனால், அவரது ஆயுதங்கள் கத்திகளோ, வாள்களோ, துப்பாக்கிகளோ அல்ல,  அவைகள் இவைகளை விட வலிமை வாய்ந்தவை. அமெரிக்காவில் செப்டம்பர் 11ம் தேதி நடந்த தீவிரவாத செயல்களுக்கு பிறகு ஒரு கிறிஸ்தவர் இஸ்லாமிய நண்பர்களுக்கு எழுதிய கடிதம், இதில் இயேசுவின் புனிதப்போர் குறித்த விவரங்கள் உள்ளன, படிக்கவும்: நம் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஓர் பகிரங்க மடல் (Open Letter to Our Muslim Friends).
* இஸ்லாமியர்கள் பொதுவாக எப்போதும் கேட்கும் கேள்வி "இறைவன் மரிக்கமுடியுமா?" என்பது தான். இயேசு மரித்து மூன்று நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தார் என்றுச் சொல்லும் போது, அந்த மூன்று நாட்களை யார் கவனித்துக்கொண்டார்கள்? இக்கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்ள படிக்கவும்:  "இயேசு தான் இறைவன் என்றுச் சொன்னால், இறைவன் எப்படி மரிக்கமுடியும்? இயேசு மரித்திருந்த அந்த மூன்று நாட்கள் யார் இந்த உலகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்? ".
தேதி: 9th October 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட ஐந்து கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* நம் தளத்தில் "இஸ்லாம் & தீவிரவாதம்" என்ற புதிய பகுதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில், அமெரிக்காவில் வாழும் முஸ்லீம்கள் தங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டிற்கு சரியான பதில்  தரும்படி அதாவது ஒரு ஆக்கப்பூர்வமான செயல்களின் மூலமாக அக்குற்றச்சட்டுக்கள் தவறானது என்பதை நிருபிக்கும் படி ஒரு அமெரிக்க குடிமகன் எழுதிய கடிதம் பதிக்கப்படுகிறது, படிக்கவும்: அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம் (An open letter to Muslims in the U.S.).
* பைபிள் படிக்க விரும்பும் இஸ்லாமியர்கள் அறிய வேண்டிய ஒரு சில முக்கியமான அறிவுரைகளை இக்கட்டுரையில் படிக்கலாம்: பைபிளை வாசித்தல் (Reading the Bible).
* குர்‍ஆன் முழுமையானதல்ல, குர்‍ஆனின் சில வசனங்களில்  தொலைந்துவிட்டன என்றுக் கூறும் ஹதீஸ்களின் சாட்சிகள் பற்றிய கட்டுரைகள். முகமதுவின் மனைவி ஆயிஷா அவர்களின் கருத்துப்படி, குர்‍ஆனின் 2:238ம் வசனம் முழுமையானதல்ல, இவ்வசனத்தில் எந்த வார்த்தை விடுபட்டுள்ளது என்பதை அறிய படிக்கவும்: ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌ (Sura 2:238 is not complete according to Aisha).
*  இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் விபச்சாரத்திற்கு கல்லெறிந்து கொல்லுதல் குர்‍ஆனில் ஒரு சட்டமாக இருந்ததாகவும், அதை முகமதுவும் பின் பற்றியதாகவும் ஹதீஸ்கள் சொல்கின்றன. ஆனால், அந்த வசனம் இன்று நம்மிடமுள்ள குர்‍ஆனில் இல்லையே? இதைப் பற்றிய விவரங்களை அறிய படிக்கவும்: விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன் (The Verse of Stoning).
* விபச்சார தண்டனையாகிய கல்லெறிந்து கொல்லுதல் வசனம் போலவே, குர்‍ஆனில் "பால் கொடுக்கும்" வசனமும் தொலைந்துள்ளது, இதைப்பற்றி ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன படிக்கவும்: இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்.
தேதி: 26th September 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
*   நாம் இருதயத்தில் குத்தப்பட்டு, உபவாசம் இருந்து நம் தவறுகளுக்காக தேவனிடம் ஒப்புறவாக விரும்புகிறோமா? உலகத்தில் நடக்கும் தீய செயல்களைக் கண்டும் காணாதவர் போல இருந்துவிடுவது சரியானதா? மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் கொடுமைகளையும், அமெரிக்கா போன்ற நாடுகளில் "கருக்கலைப்பு" என்ற பெயரால் மரித்துக்கொண்டு இருக்கும், இலட்சக்கணக்கான சிசுக்களையும் கண்டும் காணாமல் இருந்தோமானால், ஒரு நாள் நாம் இதன் வினையை அறுப்பது உறுதி, இதற்கு முடிவென்ன?  படிக்கவும்: இதயத்தில் உணர்ந்து கடைபிடிக்கும் உபவாசம் (நோம்பு) மற்றும் மனம் வருந்துதல் (Heartfelt Fasting and Repentance by Roland Clarke)
*  மரணம் என்பதின் உண்மை அர்த்தமென்ன? மரணம் தான் மனிதனின் கடைசிப் பயணமா? மரணத்தின் மீது வெற்றிப் பெற்றவரோடு சேர்ந்து நாமும் நித்திய நித்தியமாய் வாழ வழி உண்டா? உண்டு என்றுச் சொல்கிறது பைபிள். இப்படிப்பட்ட நிச்சயத்தை இவ்வுலகில் வாழும் இந்த நாட்களிலேயே பெறுவது எப்படி? படிக்கவும்: நித்திய நம்பிக்கை  (ETERNAL HOPE by Roland Clarke)
* முகமது தீர்க்கதரிசிகளுக்கெல்லாம் முத்திரையானவர், அதாவது கடைசியானவர், இவருக்கு அடுத்து ஒரு தீர்க்கதரிசியும் வரப்போவது இல்லை என்பார்கள் இஸ்லாமியர்கள். ஆனால், அதே இஸ்லாம் சொல்கிறது, அந்த முத்திரை என்பது முகமதுவின் முதுகில் உள்ள ஒரு மச்சம் போன்ற ஒரு அடையாளமாகும், இந்த மச்சம் தான் "ஒருவர் நபி" என்பதற்கு அடையாளம் என்றும் கூறுகிறது. இந்த மச்சத்தை கண்டு தான் அனேகர் முகமது ஒரு நபி என்பதை நம்பினார்கள் என்று ஹதீஸ்கள் சொல்கின்றன. இந்த சரீர குறைபாடுள்ள மச்சம் எப்படி அவரை "ஒரு நபி" என்பதை நிருபிக்க உதவும்? இதனை இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப்போகிறார்கள், இதற்கு பதில் உண்டா? படிக்கவும்: முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா? (Muhammad and the Seal of Prophethood  - A Sign or A Physical Deformity?)
தேதி: 2nd September 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட மூன்று கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* உலமனைத்தும் உள்ள முஸ்லீம்கள் குர்‍ஆனைப் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்வார்கள். முகமதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆன் அன்று எப்படி இருந்ததோ அதே போல இன்று கூட உள்ளது, ஒரு மாற்றமும் இல்லை, ஒரு எழுத்துகூட மாறவில்லை, அவ்வளவு ஏன் ஒரு புள்ளி கூட மாறவில்லை என்பார்கள். ஆனால், மூல அரபிக் குர்‍ஆன்களில் பல வித்தியாசங்கள் உள்ளன. இக்கட்டுரையில் தற்காலத்தில் நம் கைகளில் தவழும்   இரண்டு அரபி குர்‍ஆன்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு, முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது என்று நிருபிக்கப்பட்டுள்ளது, படிக்கவும்: பல விதமான அரபி குர்‍ஆன்கள்.
*  மூல குர்‍ஆன் என்று இஸ்லாமியர்களால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் சமர்கண்ட் பிரதியோடு, தற்கால குர்‍ஆன் ஒப்பிடப்பட்டு, இவைகள் இரண்டிற்கும் உள்ள அதிக எண்ணிக்கையிலான வித்தியாசத்தை, படத்துடன் விளக்கும் கட்டுரை இது, படிக்கவும்: சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு (சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு).
* பாலியல் (செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர் (Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது. முகமதுவின் பாலியல் பற்றிய‌ ஹதீஸ் ஆதாரங்கள், குர்‍ஆனின் நம்பகத்தன்மையை பாதிக்கும் அளவிற்கு உள்ளது, படிக்கவும்: முகமதுவின் பாலியல் பலம்.
தேதி: 25th August 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* உலக முஸ்லீம்கள் அனைவரும் குர்‍ஆன் ஒன்று தான் உள்ளது, அதில் ஒரு எழுத்து கூட மாறவில்லை என்றுச் சொல்லி பெருமைப்படுவார்கள்.  முஸ்லீம்களின் கவனத்திற்கு நான் கொண்டுவர விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், "filohen mahfouz" or "in saved plates" என்றுச் சொல்லக் கூடிய “தாய் குர்‍ஆன்” என்று ஒன்று இல்லை என்பது தான் உண்மை, படிக்கவும்:ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! (Quran or Qurans?! )
*  குர்‍ஆனில் ஒரு எழுத்து பிழையும் இல்லை, முகமதுவின் காலத்தில் எப்படி குர்‍ஆன் இருந்ததோ அப்படியே இப்போதும் உள்ளது, ஒரு எழுத்தும், அதன் ஒரு உருப்பும் மாறவில்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், பல எழுத்துபிழைகள் குர்‍ஆனில் இருக்கின்றது, அதனை இவர்கள் எப்படி சரி செய்தார்கள் என்பதை அறிய படிக்கவும்:  குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் (Scribal errors in the Qur'an)
தேதி: 16th August 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* முகமதுவிற்கு "நம்பத்தகுந்தவர்" என்ற பட்டம் கொடுக்கப்பட்டு இருந்தது என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், உண்மையில் அவர் நேர்மையுள்ளவராக, பொய் சொல்லாதவராக நம்பத்தகுந்தவராக இருந்தாரா? ஒரு நல்ல மனிதரை அல்லா எப்படிப்பட்டவாராக மாற்றியுள்ளார் என்பதை அறிந்துக்கொள்ள படிக்கவும்: "முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்". 
* பைபிள் குறிப்பிடும் தேவனுக்கும் குர்‍ஆன் கூறும் அல்லாவுக்கும் இய‌ல்பு ம‌ற்றும் பண்பில் காணப்படும் அடிப்படை வேறுபாடு என்ன‌?  மனிதனுடன் தனிப்பட்ட அன்பான பரஸ்பர உறவு முறையை வைத்துக் கொள்ள முயற்சி எடுத்த இறைவன் யார்? தெரிந்துக் கொள்ள படிக்கவும்: "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்? தேவன் vs அல்லா?".
தேதி: 6th August 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட நான்கு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* முகமது காலத்து மக்கள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்? ஹதீஸ்கள் சொல்லும் சாட்சியை விட குர்‍ஆன் சொல்லும் சாட்சி அதிக வலிமைமிக்கது ஏனென்றால், அல்லா சொல்லும் சாட்சி உண்மையாக இருக்குமில்லையா? படிக்கவும் "முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராகக் கண்டனர்?
* இஸ்லாம் அமைதியான முறையில் தான் பரவியது என்றுச் சொல்லும் முஸ்லீம்கள், முகமது ஓமன் நாட்டு மன்னருக்கு / மக்களுக்கு இஸ்லாமை தழுவும் படி எழுதிய கடிதத்தை படித்தே ஆகவேண்டும். இக்கடிதத்தை படித்துவிட்டு, இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் என்று உங்களால் சொல்லக்கூடுமா என்று சிந்தியுங்கள். படிக்கவும்  "ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்".
* தேவன் ஏவாளுக்கு கொடுத்த சாபம் பற்றிய முஸ்லீம்களின் குற்றச்சாட்டு சரியா? தேவனின் சாபத்தினால் தான் பெண்கள் பிள்ளை பெறுகிறார்களா?  அல்லது பெண்கள் கர்ப்பமடைந்து பிள்ளைகள் பெறுவது ஒரு மகிழ்ச்சியான ஆசீர்வாதமா? இந்த நிகழ்ச்சிப் பற்றி  இஸ்லாம் என்னச் சொல்கிறது? அறிந்துக்கொள்ள படிக்கவும்  "இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு 1 : ஏவாளும் தேவனின் சாபமும்"
* உலக மக்களின் பாவங்களை மன்னிக்க இயேசு மரித்தே ஆகவேண்டுமா? என்ற கேள்விக்கு பதில் இந்த கட்டுரையில், படிக்கவும் "பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்கவேண்டுமா?"
தேதி: 5th July 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* இக்கட்டுரையில் கிறிஸ்தவம் என்றால் என்ன? ஆரம்பத்தில் தேவன் மற்றும் மனிதனின் உறவுமுறை எப்படி இருந்தது? பிறகு எப்படி மனிதன் வழிதவறினான்? மனிதனை தேவன் அப்படியே விட்டுவிட்டாரா அல்லது தன்னிடம் மனிதன் மறுபடியும் ஐக்கியம் கொள்ள என்ன செய்தார்? மற்றும் தேவன் கொடுக்கும் இரட்சிப்பு என்னும் பரிசை எப்படி நாம் பெற்றுக் கொள்ளமுடியும் போன்ற விவரங்களை காணலாம். படியுங்கள்: அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை (Outline of the Basic Christian Beliefs).
*  பொதுவாக, எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள் என்ற தவறான எண்ணம் மக்களிடையே உண்டு, அதே போல, எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள் என்ற தவறான கருத்தும் மக்களிடையே உண்டு. இக்கட்டுரையில் எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள் ஆவார்களா? இல்லையா? என்பதைப் பற்றி விவரமாக விவரிக்கப்பட்டுள்ளது. படிக்க: அமெரிக்கர்=கிறிஸ்தவர்?  (American=Christian?)
தேதி: 12th June 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளத்தில் கீழ் கண்ட இரண்டு கட்டுரைகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
* கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கை என்ன? தேவனைப் பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்? போன்ற விவரங்களை இக்கட்டுரை விளக்குகிறது, படிக்கவும்: "கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள்? - What Do Christian Believe?"
* ம‌னித‌ன் ந‌ற்ப‌ண்புள்ள‌வ‌னாக‌ வாழ‌முடியுமா? அறிவுபெருக்க‌ம், ந‌ல்லொழுக்க‌ம், ம‌த‌ம் ம‌ற்ற‌ம் ச‌ட்ட‌ம் போன்ற‌வைக‌ளை பின்ப‌ற்றுவ‌தால் ந‌ற்ப‌ண்பு ந‌ம்மில் தொட‌ர்ச்சியாக‌ வாழுமா? மனிதன் நற்பண்புள்ளவனாக வாழ்வதற்காக தேவன் ஏதாவது செய்துள்ளாரா? போன்ற கேள்விக‌ளுக்கு ப‌தில் இக்க‌ட்டுரையில் காணலாம், படிக்கவும்: "நற்ப‌ண்பு உங்க‌ளில் வாழ்கிற‌தா? - Does Goodness Live In You?"
தேதி:  11th May 2008
இன்று ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பகுதி ஆரம்பிக்கப்படுகிறது. எங்கள் தமிழ் பகுதியை கீழ் கண்ட கட்டுரைகளோடு ஆரம்பிக்கிறோம்.
*  குர்ஆனை அல்லா பாதுகாத்தான் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களின் வாதம் சரியானது அல்ல என்பதை ஆணித்தரமாக சொல்கிறது இந்த கட்டுரை: குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா?
* முகமதுவை ஒரு தீர்க்கதரிசி என்று நிருபிக்க முஸ்லீம்கள் பயன்படுத்தும் உபாகமம் 18ம் அதிகாரத்தைக் கொண்டே "முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி" என்று நிருபிக்கும் ஆதாரபூர்வமான கட்டுரை இது: உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet).
* இயேசுவின் சிலுவை மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்து அல்லா செய்த குளறுபடியையும், அல்லாவின் அறியாமையையும் கேள்விக்குறியாக்கும் கட்டுரை: ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (Deceptive God, Incompetent Messiah and Allah Starts Christianity ... by Accident).
* மாற்கு 16ம் அதிகாரத்திலிருந்து கிறிஸ்தவர்களுக்கு சவாலை முன்வைத்த, டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்புக் கட்டுரை: மாற்கு 16ம் அதிகாரத்தின் சவால்.
* முகமது செய்த கொலைகள் பற்றிய ஒரு சிறு ஆய்வுக்கட்டுரை: முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை)
* முகமது எப்படி மக்களை கொடுமைப்படுத்த அனுமதித்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கும் ஒரு ஆய்வுக்கட்டுரை: முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)
* பைபிளையும் குர்‍ஆனையும் எப்படி ஒப்பிடுவது? பைபிளோடு குர்‍ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியா? போன்ற கேள்விகளுக்கு இந்த கட்டுரை பதில் அளிக்கிறது: பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
* பைபிள் திருத்தப்பட்டது என்று குற்றம் சாட்டும் முஸ்லீம்கள், தங்கள் வாதங்களுக்கு ஆதாரங்களை முன்வைக்க முடியுமா? படியுங்கள்: முஸ்லீம்களின் யார்-எப்போது-எங்கே-எப்படி-என்ன-ஏன் என்ற பல பிரச்சனைகள்.